விஜய்யை விமர்சனம் செய்த கருணாஸ்: “பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம்..!”

“பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம் ஒன்று இப்போது வந்துள்ளது. பாதரசம் எதிலும் ஒட்டாதது.. மக்களிடம் எப்போதும் ஒட்டப்போவதும் கிடையாது, நன்றாக இருக்கும் நாட்டை இந்த பாதரசம் உருக்குலைத்து விடும் என கருணாஸ் விமர்சனம் செய்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், “பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம் ஒன்று இப்போது வந்துள்ளது.

பாதரசம் எதிலும் ஒட்டாதது.. மக்களிடம் எப்போதும் ஒட்டப்போவதும் கிடையாது. நஞ்சு கக்கக்கூடிய கொடிய திரவம் தான் இந்த பாதரசம். தங்கத்தையும் வெள்ளியையும் இந்த பாதரசம் உருக்கும், உருக்குலைத்து விடும்.. அதேபோல நன்றாக இருக்கும் நாட்டை இந்த பாதரசம் உருக்குலைத்து விடும். இதுபோன்ற பாதரசத்தை உருவாக்கிப் பாதுகாப்பு கொடுப்பதே பாசிசங்கள் தான் என்பதை நீங்கள் அத்தனை பேரும் உணர வேண்டும்” என கருணாஸ் விமர்சனம் செய்தார்.