சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி மே தின உறுதிமொழியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்றார். மே தினத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், தொழிலாளர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது. திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் என்று பெரியார் குறிப்பிட்டு காட்டினார். மே 1ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளித்தவர் பேரறிஞர் அண்ணா. அதன் பிறகு மே 1 விடுமுறையை சட்டமாக்கி தந்தார் கலைஞர் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும் பேசுகையில்,, தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசு தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 28 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2400 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம் என மே தின பூங்காவில் நினைவுச்சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.