பொதுமக்கள் அவசர உதவி எண்கள் தமிழக அரசு அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது மட்டுமின்றி பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்து சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அவசரத் தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம். தேவை இருப்பின், கவனமுடன் இருக்கவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அவசர உதவிக்கு அரசு அறிவித்துள்ள எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
இலவச உதவி எண் – 1070
சென்னை மழை உதவி: 04425619206, 04425619207, 04425619208
Whatsapp: 94454 77205
மேலும் மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணை அழைக்கலாம் என அறிவித்துள்ளது.