திருப்பூரில் இரவு 11 மணிக்கு டேங்க் மீது 2 பேர் ஆசாமிகள் .. மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக வந்த தகவலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு கவுண்டன்நாயக்கன்பாளையம் பகுதியில், 17 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 அடி உயர குடிநீர் தொட்டி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் இந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. இங்கு 2 காவலாளிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்..
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு தொட்டியின் உச்சியில் சிலர் உட்கார்ந்து இருந்தனர்.. ஆனால், பொதுமக்களை பார்த்ததும் அந்த இளைஞர்கள் தப்பியோடி விட்டனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்களில் சிலர், தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பால் பாக்கெட், செய்தித்தாள்கள் கிடந்திருக்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் சிலர், திருப்பூர் வடக்கு காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அதற்குள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விட்டதாக அப்பகுதியினர் மத்தியில் தகவல் காட்டுத்தீயாய் பரவியதால், ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து, அதிகாரிகளும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு தலைவர் கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர் கோபால்சாமி ஆகியோர், மேல்நிலைத் தொட்டி வளாகத்தை பார்வையிட்டனர்.