முன்னாள் முதலமைச்சர் OPS யை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொசு என்று பேசியதற்கு, கொசு மிகவும் ஆபத்தானது. இந்த கொசு கடித்தால் ஜெயக்குமார் காணாமல் போய்விடுவார். பார்த்து பேச வேண்டும் என புகழேந்தி பதிலடி கொடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் புகழேந்தி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, OPS அவர்களிடமிருந்து சில கருத்து வேறுபாடுகளால் விலகி இருப்பதால்தான் தனித்தன்மையோடு செயல்பட்டு இரட்டை இலை வழக்கில் வெற்றி பெற முடிந்தது.
ஆனால், அதே நேரத்தில் மதுரையில் இருக்கின்ற உதயகுமார் சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அம்மா ஓபிஎஸ் மீது வெறுப்பாக இருந்தார்கள் என்று அவர் சொல்வது சுத்தமான பொய். மாறி மாறி பேசுவது அவரது வழக்கமாகிவிட்டது. மதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் மூன்றாவது இடத்திற்கு போய்விட்டது. அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று உதயகுமார் செல்லூர் ராஜு ராஜன் செல்லப்பா ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு ஓபிஎஸ் மீது தேவையில்லாமல் பாய்வது சரியாகாது.
2001 முதல் ஜெயலலிதா நம்மை விட்டு பிரிகின்ற 2016 வரை அதற்கு பின்னரும் அமைச்சராக மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் தான் ஓபிஎஸ். தேர்தலில் தோல்வியை கண்டிராத தலைவர் OPS நான் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் இராமநாதபுரம் போனதுதான் தவறாகி விட்டது. ஆனால், அதுவரை அவர் தோல்வி என்பதை அறியாதவர். ஜெயலலிதா நம்பிக்கையோடு வைத்திருந்த ஒரே தலைவராக OPS. இப்படி இவர்கள் பேசுவதை நிறுத்தி விட வேண்டும். தாடி எல்லாம் வைத்துக்கொண்டு உதயகுமார் சாமியார் போலவே இருக்கிறார். ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு ஜால்ரா மெஷினை கையிலே வைத்துக் கொண்டு ஜால்ரா அடித்தால் மிக நன்றாக இருக்கும்.
இன்றைக்கு பதிலாக இன் டய க்கு என்றும் திருப்பி என்பதற்கு பதிலாக தி லுப்பி, என்றும் சிபிஐ என்பது பதிலாக சிபி என்றும் டிடிவி என்பதற்கு பதிலாக டிடி என்றும் பேசுகின்ற இந்த பழனிசாமியை புரட்சித்தமிழர் என்பதா. இதுதான் உதயகுமார் ஆராய்ச்சியா. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இல்லாமல் இந்த படங்களை தவிர்த்து அம்மா அவர்கள் வித்திட்ட அவினாசி திட்டத்திற்கு சென்று பாராட்டு சூட்டிக் கொள்ளும் பழனிச்சாமியை உதயகுமார் புகழ்வதா. செல்வராஜ் இதை நியாயம் என்று சொல்வதா. இப்படியே போனால் 2026 தேர்தலில் 26 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. அதேபோன்று ஓபிஎஸ் அவர்களை பார்த்து அன்பிற்கினிய நண்பர் ஜெயக்குமார் அவர்கள் கொசு என்கிறார் கொசு மிகவும் ஆபத்தானது.
கொசு கடித்தால் மலேரியா வருகிறது. கொசுவில் இருந்து தான் டெங்கு வருகிறது. இந்த கொசு கடித்தால் ஜெயக்குமார் காணாமல் போய்விடுவார். ஆகவே பார்த்து பேச வேண்டும். நாங்கள் அவர் பக்கத்தில் இல்லை என்பதால் தேவையில்லாமல் பேசுவதை அனுமதிக்க முடியாது. இரட்டை இலை வழக்கில் தோற்று விட்டதால் பழனிசாமி பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார். ஒற்றுமைக்கு சரியாக வராவிட்டால் நீங்கள் அனைவரும் முகவரி இல்லாமல் போய்விடுவீர்கள் புகழேந்தி பதிலடி கொடுத்துள்ளார்.