கலைஞரின் பிறந்தநாளையொட்டி, திருச்சி கருமண்டபம் திமுக சார்பில் சுமார் 1500 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் கே.என் . நேரு அவர்கள் வழங்கல்

ஊரடங்கு காலத்தில் போதிய வருமானமின்றி அவதிப்பட்டு வரும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி, திருச்சி கருமண்டபம் 45-வது வட்ட திமுக சார்பில், சுமார் 1500 நபர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் கே.என் . நேரு அவர்கள் வழங்கினார்.