தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மனைவியை இழந்த அரசு ஊழியர்களாக பார்த்து திருமணம் செய்து நகை, பண மோசடியில் ஈடுபட்ட பிரபல கல்யாண ராணியை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆடு மேய்ப்பவர் முதல் அரசியல்வாதி வரை 15 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சத்யாவின் பெயரை குடும்ப அட்டையில் இணைக்க முயன்ற போது மாட்டிக்கொண்ட சம்பவம் அடங்கும் முன்பே, மதுரை விளாங்குடி அபிநயா இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் பலரிடம் நெருக்கமான பழக்கி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் என்ற செய்தி மெல்ல மெல்ல மறைய தொடங்கியது.
ஆனால், சாலையில் செல்லும் ஆண்களிடம் டூவீலர், கார்களில் லிப்ட் கேட்டு செல்லும்போது, தன்னை மருத்துவர் என்று சொல்லி பேச துவங்கி, காதல் வலை விரித்து திருமணம் செய்து நண்பர்கள் வைத்த பேனரில் வலைதளங்களில் பரவி வந்தது இது சற்றே மறையும் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மனைவியை இழந்த அரசு ஊழியர்களாக பார்த்து திருமணம் செய்து நகை, பண மோசடியில் ஈடுபட்ட பிரபல கல்யாண ராணியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஆதனூரில் வசித்து வரும் பிரதீப் மனைவி செசிலியா அதாவது ஆதனூர் வட்டார சுகாதார ஆய்வாளர் வனத்தையன் என்பவரின் மகள் செசிலியா. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மணிமங்கலம் காவல் நிலையத்தில், கோயம்புத்தூரை சேர்ந்த மடோனா என்ற 47 வயது பெண்மணி மீது செசிலியா புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில், “கடந்த 1993-ஆம் ஆண்டு ஊட்டி, மஞ்சனக்கோரை பகுதியை சேர்ந்த வனத்துறை அதிகாரி மகேந்திரன் என்பவரை மடோனா திருமணம் செய்துள்ளார். அவர் இறந்த பிறகு, கடந்த 2014-ஆம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த, மனைவியை இழந்து தனியாக வசித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கனகராஜ் என்பவரை மடோனா 2-வதாக திருமணம் செய்துள்ளார். பின்னர் அவரை ஏமாற்றி நகை, பணத்தைப் பறித்துக் கொண்டு விவாகரத்து பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு மனைவியை இழந்து தனியே வசித்த ஆதனூர் பகுதியை சேர்ந்த வட்டார சுகாதார ஆய்வாளரும் எனது தந்தையுமான வனத்தையனை போலி ஆவணங்கள் மூலம் தேவாலய பாதிரியாரை ஏமாற்றி, குழந்தை இயேசு ஆலயத்தில் 3-வதாக மடோனா திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், தன்னுடைய தந்தையின் சொத்துகளை அபகரிக்கும் வகையில், அவரது குடும்பத்தினரை அடியாட்களுடன் வந்து மிரட்டி, வீட்டை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வனத்தையனின் மகள் செலிலியா புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுவின் பேரில், மணிமங்கலம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, மடோனாவையும் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில்தான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, மனைவியை இழந்து தனியே வசிக்கும் ஆண்களுக்கு , அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மட்டுமே மடோனா குறி வைப்பாராம்.. தனிமையில் வசித்து வரும் அரசு ஊழியர்களிடம் நெருங்கி பழகி, அவர்களையே திருமணம் செய்து கொண்டு நகை, பணம், சொத்துக்களை அபகரித்துவிடுவாராம்..
மடோனாவின் இந்த மோசடியில் ஏராளமான அப்பாவி அரசு ஊழியர்கள் சிக்கியிருப்பதாக தெரிகிறது.. மடோனாவிடம் தொடர்ந்து விசாரித்தால்தான், அவர் எத்தனை பேரை திருமணம் செய்தார்? யார் யாரை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்தார் என்று தெரியவரும்.