IPL 2025: ஆயுஷ் மாத்ரேவை தட்டிக்கொடுத்த சூர்யகுமார் யாதவ்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான மிக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

18 -வது IPL தொடரின் 38-வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் 8-வது இடத்திலுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் 10-வது இடத்திலுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பிளே ஆப் சுற்று முன்னேற வதற்கான பலப்பரீட்சை நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை CSK அணி எடுத்துள்ளது.இதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே IPL தொடரில் அறிமுகமாகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே விக்கெட் இழந்து வெளியேறிய போது சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.