ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் நடத்தி 29 அப்பாவிகளை கொன்ற 4 பேர் இவர்கள் தான்..!

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளின் ஸ்கெட்ச் வரைபடம் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக ஒரேயொரு பயங்கரவாதி சம்பவ இடத்தில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது எடுத்த போட்டோ வெளியிடப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.