IPL -2025: KL. ராகுல் “ஆக்ரோஷமாக” செய்ததை “நக்கலாக” செய்து காட்டிய விராட் கோலி..!

“இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என “ஆக்ரோஷமாக” KL. ராகுல் செய்ததை “நக்கலாக” விராட் கோலி செய்து காட்டினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. IPL -2025 தொடரின் 24-வது லீக் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த KL. ராகுல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து சேசிங்கை முடித்து வைத்தார். அந்த வெற்றிக்குப் பிறகு, தனது சொந்த ஊரான பெங்களூருவில் தான் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டும் வகையிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஐபிஎல் ஏலத்தில் வாங்கவில்லை என்ற கோபத்தை வெளிக்காட்டும் வகையிலும், அவர் ‘இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என பேட்டை வைத்து “ஆக்ரோஷமாக” சைகை செய்து காட்டினார்.

அது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த விராட் கோலி தனது சொந்த ஊரான டெல்லியில் வைத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி விட்டு இதேபோல பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதோபோலவே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. விராட் கோலி நிதானமாக விளையாடி 47 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். க்ருனால் பாண்டியா அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

போட்டிக்குப் பிறகு, KL. ராகுல் “இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என பேட்டை வைத்து “ஆக்ரோஷமாக” சைகை செய்தது போலவே, விராட் கோலியும் அவர் முன் “நக்கலாக” அதே சைகையை செய்து காட்டினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 வது ஓவரில் 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு வெற்றிக்காக மறுமுனையில் விருத்திமான் சாஹா போராட்டம்

ஷார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

ஜேசன் ஹோல்டர் 4.1 ஓவரில் கே.எல். ராகுல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். மேலும் அதே ஓவரில் 5-வது பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம் ஜோடி சேர்த்தார். ரஷீத் கான் 10.4 ஓவரில் கிறிஸ் கெய்ல் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்த்தார்.

சந்தீப் சர்மா 11.4 ஓவரில் நிக்கோலஸ் பூரன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்த்தார். அப்துல் சமத் 14.4 ஓவரில் ஐடன் மார்க்ரம் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஹர்பிரீத் பர், தீபக் ஹூடாவுடன் ஜோடி சேர்த்தார். ஜேசன் ஹோல்டர் 15.4 ஓவரில் தீபக் ஹூடா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய நாதன் எலிஸ், ஹர்பிரீத் பருடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 125 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர். முகமது ஷமி முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் டேவிட் வார்னர் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். முகமது ஷமி 2.2 ஓவரில் கேன் வில்லியம்சன் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மூன்றாவது ஓவரிலேயே 10 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது. அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே, விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். ரவி பிஷ்னோய் வீசிய 8-வது ஓவரின் கடைசி பந்தில் மனீஷ் பாண்டே 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேதர் ஜாதவ், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். கேதர் ஜாதவும் அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை ரவி பிஷ்னோய் 12.2 ஓவரில் கேதர் ஜாதவ் 12 ரன்களுக்கு நடையை கட்ட அடுத்து அப்துல் சமத் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆகமொத்தத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 வது ஓவரில் 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக மறுமுனையில் விருத்திமான் சாஹா போராடி கொண்டிருக்கிறார்.