IPL 2025: ஆயுஷ் மாத்ரேவை தட்டிக்கொடுத்த சூர்யகுமார் யாதவ்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான மிக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

18 -வது IPL தொடரின் 38-வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் 8-வது இடத்திலுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் 10-வது இடத்திலுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பிளே ஆப் சுற்று முன்னேற வதற்கான பலப்பரீட்சை நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை CSK அணி எடுத்துள்ளது.இதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே IPL தொடரில் அறிமுகமாகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே விக்கெட் இழந்து வெளியேறிய போது சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

IPL -2025: முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த 14 வயது இளங்கன்று வைபவ் சூர்யவன்ஷி..!

IPL வரலாற்றிலேயே 14 வயதில் களமிறங்கிய முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. IPL -2025 தொடரின் 36-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் கேப்டன் பொறுப்பை ரியான் பராக் ஏற்றுக் கொண்டார்.

அதேபோல் இந்த போட்டியில் 14 வயதாகும் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலமாக IPL வரலாற்றிலேயே 14 வயதில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை விளாசியது.

இதன்பின் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை வீச ஷர்துல் தாக்கூர் வந்தார். இந்த ஓவரிம் 4-வது பந்தை எதிர்கொள்ள வைபப் சூர்யவன்ஷி வாய்ப்பு கிடைத்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் கொஞ்சம் விலகி சென்று கவர்ஸ் திசையை நோக்கி சிக்ஸ் அடித்து அலற வைத்தார்.

IPL தொடரில் விளையாடிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் அடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆவேஷ் கான் வீசிய 2-வது ஓவரிலும் சிக்ஸ் விளாசி அசத்தினார். IPL மெகா ஏலம் நடைபெற்ற போது வைபவ் சூர்யவன்ஷிக்கு வயது 13 அவரின் அடிப்படை விலை 30 லட்சமாக தான் இருந்தது. ஆனால் பல அணிகளும் அவருக்காக போட்டி போட்ட அவருடைய விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வரை உயர்ந்து.

இந்நிலையில் 14 வயதிலேயே பயிற்சி முகாமில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியதால் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி அவருக்கு முதல் முறையாக இந்த தொடரில் வாய்ப்பு வழங்கியது. திடீரென சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக வந்து முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

IPL 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு..!

IPL 2025 சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டு வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது. 18-வது IPL தொடர் மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்தித்தது. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹேசில்வுட் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் எடுத்திருந்த குவின்டன் டி காக்.ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் அஜின்கியா ரஹானே, சுனில் நரைனுடன் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 103 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், அஜின்கியா ரஹானே 25 பந்துகளில் அரை சதம் பதிவு செய்த போது சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ரஷிக் தர் சலாம் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் 56 ரன்கள் எடுத்த நிலையில் அஜின்கியா ரஹானே வெளியேறினார்.

பின்னர் வந்த கொல்கத்தா அணியின் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மற்றும் ரஸ்ஸல் என மூவரும் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது. க்ருனல் பாண்டியா 3, ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் ஆர்சிபி தரப்பில் வீழ்த்தினர். சுயாஷ், ரஷிக், யஷ் தயாள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 8.3 ஓவரில் 95 ரன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்திருந்த நிலையில் பிலிப் சால்ட் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இம்பேக்ட் வீரராக தேவதூத் பாடிக்கல் விராட் கோலியுடன் இணைந்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.4 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவதூத் பாடிக்கல் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் பட்டிதார் விராட் கோலியுடன் இணைந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க லியம் லிவிங்ஸ்டன், 5 பந்துகளில் 15 ரன்கள் மற்றும் விராட் கோலி 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

IPL 2022: முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற குஜராத் டைட்டன்ஸ் சாதனை

15-வது   ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ப்ளே ஆஃப் சுற்று சுற்றிற்கு தகுதி பெறாத நிலையில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

15-வது ஐபிஎல் திருவிழா கடந்த மார்ச் மாதம் 26–ந் தேதி முதல் தொடங்க மும்பையில் உள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் மைதானம் மற்றும் டிஒய் பாட்டீல் மைதானங்களில் 55 போட்டிகளும் மற்றும் புனேவில்  உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மீதமுள்ள 15 போட்டிகள் என ஆக மொத்தம் 74 போட்டிகள் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

குரூப்-2 ல் கலந்து கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் போட்டியில் மார்ச் 28–ந்  தேதி நடைபெற்ற முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை  5 விக்கெட் வித்தியாசத்திலும், ஏப்ரல் 2– ந் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணியை  14 ரன்கள் வித்தியாசத்திலும், ஏப்ரல் 8– ந் தேதி நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை  6  விக்கெட் வித்தியாசத்திலும், தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தியது.

இதையடுத்து  ஏப்ரல் 11– ந் தேதி நடைபெற்ற நான்காவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம்  8  விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும், ஏப்ரல் 14– ந் தேதி நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை  37  ரன்கள் வித்தியாசத்திலும், ஏப்ரல் 17– ந் தேதி நடைபெற்ற ஆறாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்திலும்,  ஏப்ரல் 23– ந் தேதி நடைபெற்ற ஏழாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்திலும், ஏப்ரல் 27– ந் தேதி நடைபெற்ற எட்டாவது போட்டியில் லீக் சுற்றில்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் தோல்வி அடைந்ததை பழிதீர்க்கும் விதமாக  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

மேலும் ஐபில் லீக் போட்டியில் 14 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து  கொண்டது. அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  14 போட்டிகளில் விளையாடிய 9 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆகையால் ப்ளே ஆஃப் சுற்றில்,  லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் லீக் சுற்றில் ஏற்கனவே இரண்டு முறை விளையாடிய குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தல ஒரு முறை வெற்றி பெற்றிருந்தாலும், ப்ளே ஆஃப் சுற்றில் வெற்றி பெரும் அணி நேரடி இறுதி சுற்றிற்கு தகுதி பெரும் என்பதால் இந்த போட்டி மிகவும் பரபரப்பு ஆனது.  மே 24– ந் தேதி நடைபெற்ற சான்சு சாம்சன் தலைமையிலான  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரிட்சையில் இறங்கியது.

அப்போது டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பில்டிங் தேர்வு செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்கள் எடுக்க 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 3 பந்துகள் மீதம் இருக்கையில் 191 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

ஆனால் மே 27 -ந் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத தயாரானது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் களமிறங்க 3.6 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது 22 ரன்கள் எடுத்த நிலையில்  யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க அதனைத்தொடர்ந்து சான்சு சாம்சன் 14 ரன்கள் மற்றும் ஜோஸ் பட்லர் 39 ரன்களில் ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்கள் எடுக்க 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  அதாவது முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

ஐபில்: 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

அபுதாபியில் உள்ள சர்வதேச மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று என்ற நிலையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். அதேபோல ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் போட்டி தொடக்கம் முதலே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்து வீசசை நாலாபுறமும் சிதறடித்தனர். இதன்விளைவாக மும்பை இந்தியன்ஸ் அணி ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ரஷித் கான் 5.3 ஓவரில் ரோகித் சர்மா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். ஜேசன் ஹோல்டர் 8.3 ஓவரில் ஹர்திக் பாண்டியா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கீரான் பொல்லார்ட், இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். உம்ரான் மாலிக் 9.1 ஓவரில் இஷான் கிஷன் 84 ரன்கள் எடுத்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 124 ரன்களுக்கு 3 வது விக்கெட்டுவை பறிகொடுத்தது. அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், கீரான் பொல்லார்டுடன் ஜோடி சேர்த்தார்.

அபிஷேக் சர்மா 12.5 ஓவரில் கீரான் பொல்லார்ட் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 235 ரன்கள் எடுத்தது.

ஆனால் 64 ரன்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சுருட்டினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 54 ரன்கள் 5.2 ஓவரில் எடுத்திருந்த நிலையில் ட்ரென்ட் போல்ட் ஓவரில் ஜேசன் ராய் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றிக்கான கனவு தகர்ந்தது.

ஜேம்ஸ் நீஷம் 6.6 ஓவரில் அபிஷேக் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 193 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர்.

முதல் ஓவரில் 10 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி பந்தில் சுப்மான் கில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்த்தார். ஷர்துல் தாக்குர் 5.1 ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் இயன் மோர்கன், ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ஜோஷ் ஹேசில்வுட் 9.1 ஓவரில் இயன் மோர்கன் 14 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் இயன் மோர்கன், ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ஜோஷ் ஹேசில்வுட் 9.1 ஓவரில் இயன் மோர்கன் 14 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா , ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா 12.2 ஓவரில் ராகுல் திரிபாதி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் அதிரடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் 7 ஓவர் முடிவில் 70 ரன்கள் சேர்த்தனர். ஆண்ட்ரே ரஸ்ஸல் 8.2 ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி, பாப் டு பிளிஸ்சிஸ்ஸிடன் ஜோடி சேர்த்தார்.

பிரஷித் கிருஷ்ணா 11.3 ஓவரில் பாப் டு பிளிஸ்சிஸ் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு, மொயீன் அலியுடன் ஜோடி சேர்த்தார். சுனில் நரைன் 14.2 ஓவரில் அம்பதி ராயுடு 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, மொயீன் அலியுடன் ஜோடி சேர்த்தார். லுகி பெர்ஹூசன்16.4 ஓவரில் மொயீன் அலி 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி,சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர மகேந்திர சிங் தோனி வந்த வேகத்தில் நடையை கட்டினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.3 ஓவரில் 142 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிருந்தது. கடைசி ஓவரில் 2 விக்கெட்களை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

துபாயில் உள்ள மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அக்சர் பட்டேல் வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ககிசோ ரபாடா 4.6 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே , கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லலித் யாதவ் 9.5 ஓவரில் கேன் வில்லியம்சன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ககிசோ ரபாடா 10.1 ஓவரில் மணீஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார்.

அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரஷித் கான், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த தடுமாறி கொண்டிருந்த நிலையில் ரஷித் கான், அப்துல் சமத் அதிரடியாக ஆடிய டெல்லி பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகள் அக்சர் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா களமிறங்கினர். கலீல் அகமது 2.5 ஓவரில் பிருத்வி ஷா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்த்தார். ரஷித் கான் 10.5 ஓவரில் ஷிகர் தவான் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்த்தார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் 47 ரன்களும், ரிஷப் பந்த் 35) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி அணிக்கு 135 ரன்கள் இலக்கு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

துபாயில் உள்ள மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அக்சர் பட்டேல் வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ககிசோ ரபாடா 4.6 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே , கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லலித் யாதவ் 9.5 ஓவரில் கேன் வில்லியம்சன் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ககிசோ ரபாடா 10.1 ஓவரில் மணீஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய ரஷித் கான், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த தடுமாறி கொண்டிருந்த நிலையில் ரஷித் கான், அப்துல் சமத் அதிரடியாக ஆடிய டெல்லி பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகள் அக்சர் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.