சீனா திட்டவட்டம்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் எவரையும் நாங்கள் எதிர்ப்போம்..!

சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்” என சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல் நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில், உலக நாடுகளுக்கான வரி விதிப்பை அமெரிக்காவின் விடுதலை நாளான டொனால்டு ட்ரம்ப் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ஜப்பான் பொருட்களின் மீது 24 சதவீதம், இந்திய பொருட்களின் மீது 27 சதவீதம், சீனா பொருட்களின் மீது 34 சதவீதம், வியட்நாம் பொருட்களின் மீது 46 சதவீதம், வங்கதேசம் பொருட்களின் மீது 37 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் பொருட்களின் மீது 20 சதவீதம், இந்தோனேசியா பொருட்களின் மீது 32 சதவீதம், பாகிஸ்தான் பொருட்களின் மீது 29 சதவீதம் மற்றும் தாய்லாந்து பொருட்களின் மீது 36 சதவீதம் என ஆகமொத்தம் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனாவும் வரிகளை விதித்தது. இதனால் மற்ற நாடுகளின் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்துவதாவும், சீனாவுக்கான வரிவிதிப்பை 245 சதேவீதமாகவும் அதிகரித்து அமெரிக்கா அறிவித்தது இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கான அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது.

இந்நிலையில், ‘சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்” என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீனா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் பல பரஸ்பர எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்’ என்று தெரிவித்துள்ளது. இவ்விரு வள்ளலரசுகளின் வர்த்தக போருக்கு இடையில் மற்ற நாடுகள் இரு தரப்பில் இருந்தும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன என்பதே உண்மை.

சீன வெளியுறவு செய்தி தெடர்பாளர்: இந்திய சிறுவன் மாயமானது குறித்து எதுவும் தெரியாது

அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற சிறுவன் வேட்டையாடுவதற்காக வெளியே சென்றபோது, சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள்ளே நுழைந்து அவனை கடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் சீன வெளியுறவு செய்தி தெடர்பாளர், ‘சீன ராணுவம் சட்டத்துக்கு உட்பட்டு எல்லைகளை கண்காணிக்கிறது. அத்துடன் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளை ஒடுக்குகிறது. ஆனால் சிறுவன் மாயமான இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என தெரிவித்துள்ளார்.

சீனாவின் நீருக்கடியில் சென்று தாக்கும் அதிநவீன போர்க்கப்பல் பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கல்

சீனா, பாகிஸ்தான் இடையே 2017 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது, அதன்படி, சீனாவின் ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் வடிவமைத்துள்ள 054 A போர்க்கப்பல் “உலகத் தரம் வாய்ந்த நீருக்கடியில் சென்று தாக்கும் திறன்” கொண்டவை அகும். இதனை சீனா து. ஷாங்காய் நகரில் நடந்த விழாவில் இந்த போர்க்கப்பல் பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

 

விண்வெளியில் நடைபயணம்: சாதனை படைத்த முதல் பெண்

சீனா விண்வெளியில் தனக்கென ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வருகிறது. அந்த விண்வெளி நிலையம் 2022-ம் ஆண்டுக்குள் முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா மிகுந்த தீவிரம் காட்டிவருகிறது. இதனைத்தொடர்ந்து ‘தியான்ஹே’ என பெயரிடப்பட்டுள்ள விண்வெளி நிலையத்தின் இறுதி கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஜாய் ஜிகாங், யே குவாங்பு ஆகிய இரு விண்வெளி வீரர்களுடன் வாங் யாப்பிங் என்கிற வீராங்கனையையும் சீனா கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது.

இந்நிலையில் ‘தியான்ஹே’ விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர் ஜாய் ஜிகாங்குடன் இணைந்து வீராங்கனை வாங் யாப்பிங் விண்வெளியில் நடை பயணம் மேற்கொண்டார். இருவரும் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்த சுமார் 6½ மணி நேரம் விண்வெளி நடை பயணத்தை மேற்கொண்டனர். இதன் மூலம் விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட முதல் சீன பெண் வாங் யாப்பிங் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

தடுப்பு மருந்துகள் நூறு சதவீத பாதுகாப்பு தராது. எனவே மக்கள் சமூக விலகலைப் பின்பற்றி கவனத்துடன் நடந்துகொள்ளவேண்டியது அவசியம்

சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ச்சியாக ஒவ்வொரு நாடுகளிலும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. கொரோனா பரவத்தொடங்கி 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் குறையாமலேயே உள்ளது. கொரோனா வைரஸ் தன்னை தற்காத்துக் கொள்ள அவ்வப்போது உருமாறி வருகிறது.

அந்த வகையில் கொரோனா வைரசின் டெல்டா ரகம் தற்போது தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் பரவி வருகிறது. தற்போது உலகத்தையே இந்த டெல்டா ரகம் அச்சுறுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வாரம் 54 ஆயிரத்து 268 புதிய புதிய நோயாளிகள் உருவாக்கியுள்ளனர் என இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தடுப்பு மருந்துகள் நூறு சதவீத பாதுகாப்பு தராது. எனவே மக்கள் சமூக விலகலைப் பின்பற்றி கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.