கமலா ஹாரிஸ் விமர்சனம்: அதிபர் பதவிக்கு டோனால்ட் டிரம்ப் தகுதியற்றவர்..!

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பளராக தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

கமலா ஹாரிஸ் நேற்று பேசுகையில், “அமெரிக்க அரசியலமைப்புக்கு விசுவாசமாக செயல்படும் ராணுவத்தை டோனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. சர்வாதிகாரியாக செயல்பட நினைக்கும் டோனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி வகிக்க தகுதியற்றவர்” என கமலா ஹாரிஸ் பேசினார்.

வீட்டு வேலைகள் செய்யும் ஆப்டிமஸ் மனித உருவ ரோபோக்கள் அறிமுகம்..!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் குழந்தைகளை கவனிப்பது முதல் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியது மனித உருவ ரோபோவை அறிமுகம் செய்துள்ளார்.

நாளை பொது இடங்களில் மனிதர்களுடன், மனித உருவ ரோபோக்களும் நடமாடும் வகையில் தான் எதிர்காலம் இருக்கும் எனவே எலான் மஸ்க். அதற்கான விதையை விதைத்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை தொடர்ந்து தற்போது அவர் ரோபோ, தானியங்கி வாகனங்களில் தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் ‘வீ ரோபோ’ எனும் நிகழ்ச்சியில் அதிநவீன மனித உருவ ரோபோவை மஸ்க் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ‘ஆப்டிமஸ்’ எனப்படும் இந்த ரோபோ எதிர்காலத்தில் நமது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கப் போகிறார் என மஸ்க் தெரிவித்தார். ஏற்கனவே மனிதனுக்கு உதவ பல ரோபோக்கள் இருந்தாலும், ஆப்டிமஸ் அசாத்திய வேகத்தில் சிந்தித்து செயல்படக் கூடிய ரோபோவாக இருக்கும் என மஸ்க் தெரிவித்தார்.

வீட்டிலுள்ள புற்களை வெட்டுவது, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, நாயை வாக்கிங் அழைத்துச் செல்வது, வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொள்வது, சமையல் செய்வது, பரிமாறுவது என அனைத்து வேலைகளையும் இந்த ரோபோ செய்யக் கூடிய திறமை வாய்ந்தது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் ஆப்டிமஸ் மனித உருவ ரோபோக்கள் கண்ணாடி கிளாசில் குளிர்பானங்களை நிரப்பி பார்வையாளர்களுக்கு பரிமாறி அசத்தின.

மேலும், மக்களிடம் உரையாடிய ஆப்டிமஸ், பிறந்தநாள் வாழ்த்து பாடல்களையும் பாடி பிரமிக்க வைத்தன. பார்வையாளர்களின் பல கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பதிலளித்து பாராட்டுகளையும் பெற்றன. இந்த ரோபா 20,000 அமெரிக்க டாலரில் தொடங்கி 30,000 டாலர் வரையிலும் இருக்கும் என மஸ்க் கூறி உள்ளார்.

இஸ்ரேல் எச்சரிக்கை: ஐ.நா அமைதிப்படை வீரர்கள் தெற்கு லெபனானிலிருந்து உடனடியாக வெளியேறு..!

ஐ.நா அமைதிப்படை வீரர்கள் தெற்கு லெபனானிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருக்கிறார். காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக சண்டையிட்டு வருகிறது.

காசாவில் கடந்த 9 நாட்களாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரமாக்கி இருக்கிறது. குறிப்பாக, வடக்கு காசாவில் கடந்த 9 நாளில் 300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு ஹமாசின் ஆதிக்கம் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார். இதே போல, லெபனானின் நபாதியா நகரில் இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 1910-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த மார்க்கெட் கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. 12 குடியிருப்பு கட்டிடங்கள் 40 கடைகள் மற்றும் அஹெல் எல் குரான் மசூதி மற்றும் அதை சுற்றியுள்ள கட்டிடங்களும் தரைமட்டமாகின.

லெபனான் ராணுவத்திற்கு உதவ, தெற்கு லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் ஐ.நா அமைதிப்படை வீரர்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சண்டையிட்டு தாக்குதல் நடத்துகிறது. 2-வது முறையாக நேற்றும் ஐ.நா அமைதிப்படை வீரர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் ஐ.நா அமைதிப்படை வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லும் அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென ஐ.நா பொதுச் செயலாளர் கட்டரசிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தி உள்ளார்.

இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலில் ஈரான் அரசு செயல்பாடுகள் முடங்கியதா..!?

ஈரான் அரசின் செயல்பாடுகள் இஸ்ரேல் உளவுத்துறையின் சைபர் தாக்குதலால் முடங்கியுள்ளன. மேலும் அணுசக்தி தளங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பு விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது செல்போன்களைத் தவிர பேஜர்கள் மற்றும் வாக்கிடாக்கிகள் போன்ற மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, செக் இன்கள் மற்றும் லக்கெஜ்களில் பேஜர்கள் மற்றும் வாக்கிடாக்கிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரானில் விமான பயணிகள் செல்போன்களைத் தவிர மற்ற எந்த தகவல் தொடர்பு சாதனங்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் இன்டர்நேஷனல் இங்கிலீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த மாதம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் ஆகியவை திடீரென வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 3000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அரசு மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 5-ஆம் தேதி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், துபாயிலிருந்து அல்லது துபாய் வழியாக செல்லும் விமானங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் தங்களின் பேஜர்கள் மற்றும் வாக்கிடாக்கிகளை தடை செய்தது. முன்னதாக நேற்று ஈரானில் கடுமையான சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரான் அரசின் நீதித்துறை, சட்டத்துறை மற்றும் நிர்வாகத்துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஈரான் அரசு செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

மேலும் அந்த துறைகளின் தகவல்கள் திருடப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்தது. மேலும் தங்களின் அணுசக்தி வசதிகள், எரிபொருள் விநியோகம், நகராட்சி நெட்வொர்க்குகள், போக்குவரத்து நெட்வொர்க்குகள், துறைமுகங்கள் மற்றும் பல முக்கிய துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்த குறி வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் சர்வதேச அமைப்பு தெரிவித்தது.

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக கொண்டாடும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியா..!?

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என்று இந்தியன் – அமெரிக்கன் நிதிதிரட்டும் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம்(AAPI), நேற்று அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விரைவில்: ஏ.ஆர். ரஹ்மானுடன் இரு சிறப்பான மாலைப் பொழுது. அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு தருணத்தை ஏ.ஆர். ரஹ்மானுடன், உலகத்தரம் வாய்ந்த நேரடி இசை நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டாடுங்கள்” என பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் இதுகுறித்து ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஏதுமிடவில்லை. என்றாலும், நிகழ்ச்சிக்கான பதிவில் நேரடி இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்வதற்கான இணைப்பை ஏஏபிஐ வழங்கியுள்ளது.

ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் அமெரிக்க அதிபருக்கான இந்தத் தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸை ஆதரித்தது. மேலும் நாடு முழுவதுமான காங்கிரஸ் மற்றும் பிற அரசு பதவிகளுக்கு போட்டியிடும் ஏஏபிஐ வேட்பாளர்களையும் ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் எச்சரிக்கை: ‘தெற்கு லெபனானை விட்டு மக்கள் உடனடியாக வெளியேறுங்கள் ’

தெற்கு லெபனானிலுள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா இயக்கத்தை இஸ்ரேல் கதி கலங்க வைத்து வந்தது. மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகி 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மறைந்து இருந்த பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இதுமட்டுமின்றி, லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் “Fattah 1 மற்றும் Fattah 2” ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.

Fattah 1 என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி, இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

மேலும் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் பேசுகையில், “ஹிஸ்புல்லாக்களின் நடவடிக்கை, இஸ்ரேல் ராணுவத்தை அதற்கு எதிராக செயல்படத் தூண்டியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் உங்களை துன்புறுத்த விரும்பவில்லை. உங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் வீடுகளை விட்டு நீங்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ஹிஸ்புல்லாக்களின் நடமாட்டம், அவர்களின் இடங்கள், ஆயுதக் கிடங்குகளுக்கு அருகில் இருப்பவர்கள் தங்களின் உயிரை பணையம் வைக்கிறார்கள் என்பது பொருள்” என இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

Yair Labit: ஈரானுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் பதிலடி..! சிரியா, ஈராக், ஏமன், லெபனான், காசாவுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கும்..!

இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் லாபிட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா இயக்கத்தை இஸ்ரேல் கதி கலங்க வைத்து வந்தது. மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகி 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மறைந்து இருந்த பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இதுமட்டுமின்றி, லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் “Fattah 1 மற்றும் Fattah 2” ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.

Fattah 1 என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி, இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

மேலும் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் லாபிட் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து யாயர் லாபிட் எக்ஸ் பக்கத்தில், “நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் குறிப்பிடத்தகுந்த கடுமையான விலையைக் கொடுத்த ஆகவேண்டும். இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்பது ஈரானுக்குத் தெரியும். அந்த பதிலடி மிகவும் கடுமையானதாகவும், சிரியா, ஈராக், ஏமன், லெபனான், காசா மற்றும் ஈரானுக்கு தெளிவான ஒரு செய்தியைத் தெரிவிப்பதாகவும் இருக்க வேண்டும்” என யாயர் லாபிட் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரான் – இஸ்ரேல் மோதல் பள்ளி மாணவர்கள் சண்டை மாதிரி இருக்கு..! தம்பி அப்படியே அடிச்சுக்கோங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..!

இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா இயக்கத்தை இஸ்ரேல் கதி கலங்க வைத்து வந்தது. மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகி 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மறைந்து இருந்த பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இதுமட்டுமின்றி, லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் “Fattah 1 மற்றும் Fattah 2” ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.

Fattah 1 என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி, இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

மேலும் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மீதான தாக்குதலை முறியடிக்கும்படி அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் பைடன் தலைமையிலான ஆளும் ஜனநாயக கட்சிக்கு இந்த போர் சூழல் தலைவலியாக மாறி உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல்- ஈரான் சண்டை குறித்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று பேசிய டொனால்டு டிரம்ப், பள்ளி வளாகத்தில் இரண்டு குழந்தைகள் சண்டைபோட்டுக் கொள்வதுபோல இது உள்ளது. சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும். ஆனால் நிச்சயம் இது மோசமான போர். இது எங்கு சென்று முடியும்? அவர்கள் 200 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர், இது நிச்சயம் நடக்கக்கூடாத ஒன்று, எனவே மத்திய கிழக்கில் நாம் தலையிட்டாக வேண்டும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

விவாகரத்து கேட்ட மனைவி..! துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே ஓட முயன்ற கணவன்..!

சீனாவை சேர்ந்த சென் தனது கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் சமீபத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடிய நிலையில் நீதிமன்றத்தில் இருந்து மனைவியை குண்டுக்கட்டாக தூக்கி ஓடிய கணவன் இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இன்றைய நவீன காலத்தில் இளம் தலைமுறையினர் வாழ்கை என்றால் என்ன என்று புரியாமல் நமது பெரியோர்கள் எப்படி எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்றும் யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் தங்களைத் திணித்துக் கொண்டு அவர்களைப் போலவே பல பேர் வாழப்பழகி விட்டார்கள். அதன்விளைவுகள் திருமணம் முடிந்த கையுடன் பல இளம் தலைமுறையினர் விவகாரத்தை நோக்கி சென்று அவர்களின் எதிர்காலத்தையம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தொலைத்து கொண்டுள்ளார்.

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ ‘திருமணம் ஆயிரம் காலத்து பயிர்’ போன்றவை பழமொழிகள் மட்டும் அல்ல, நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை எல்லாவற்றையும் மறந்து ஏதுஏதுக்கோ இன்றைய தலைமுறையினர் விவகாரத்து பெறுகின்றனர்.

சீனாவை சேர்ந்த லீ மற்றும் சென், ஆகிய இருவர் 20 வருடங்களாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் சமீபத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஆனால் கணவர் லீ மனைவியை பிரிய துளியும் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்டது சிறிய பிரச்சனைதான் என்றும் அவர்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறி நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. ஆனால் தனக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டும் என்று மனைவி சென் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதுதொடர்பான விசாரணைக்கு கணவன் மனைவி ஆகிய இருவரும் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், விசாரணையை நடக்கவிடாமல் லீ தனது மனைவி கணவர் துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தை விட்டு வெளியே ஓட முயற்சித்துள்ளார்.

மனைவியை கையில் ஏந்திக்கொண்டு சத்தமாக கூச்சலிட்டபடி லீ நீதிமன்றத்தை விட்டு ஓட முயற்சித்ததை பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். கணவனின் காதலை பார்த்து வியந்த நீதிபதி, இனிமேல் மனைவியிடம் சண்டை போட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். அதனபடி, ‘எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்’ என்று கணவர் லீ எழுதிக்கொடுத்துவிட்டு மனைவியை அழைத்து சென்றார்.

பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை: “ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்”

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலின் மீதான ஈரானின் தாக்குதல் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்தார். தங்களை தற்காத்து கொள்வதற்கான வலிமையும் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான உறுதியும் இஸ்ரேலுக்கு இருப்பதை ஈரான் மறந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், “ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. அதற்கான விலை கொடுத்தாக வேண்டும். எங்களை தற்காத்து கொள்ள எங்களுக்கு இருக்கும் வலிமையும்,எதிராளிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான உறுதியை பற்றியும் ஈரான் ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை.,”என தெரிவித்தார்.

இக்கட்டான நேரத்தில் பக்கபலமாக இருந்த அமெரிக்காவுக்கும் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே ஈரான் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பதுங்கு குழிகளில் இருந்து மக்கள் வெளியே வரலாம் என்றும் இஸ்ரேல் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.