படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 60,000 டாலர் சம்பாதித்து வரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை மோனிக் ஜெரமையா

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 60,000 டாலர் சம்பாதித்து வரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை மோனிக் ஜெரமையாவின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். வீடுகள் பற்றாக்குறை, அதிக செலவீனம் ஆகியவை காரணமாக ஒரே பெட்டை ஷிப்ட் முறையில் பகிர்ந்து கொள்ளும் முறை ஹாட் பெட்டிங். இது கப்பல், தொழில்துறை பகுதிகள், ராணுவ முகாம்கள் போன்ற அதிக நெருக்கடியான இடங்களில் வெவ்வேறு ஷிப்ட்களில் பணி செய்பவர்கள் இப்படி ஒரே படுக்கையை ஒருவர் மாற்றி ஒருவர் பகிர்ந்து கொள்ளும் முறை பல நாடுகளில் நடைமுறையில் காணப்படுகின்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தை சேர்ந்தமோனிக் ஜெரமையா ஒரு ஆசிரியை. கொரோனா பரவலுக்கு முந்தைய காலக் கட்டத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு தொழில் வீழ்ச்சி அடைந்தது. மேலும் ஆசிரியை வேலையும் ஆன்-லைன் கல்விக்கு மாறியதால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளார்.

இதனால், தனது வருமானத்தை பெருக்க என்ன செய்யலாம் என்று யோசித்த ஜெரமையாவுக்கு புதிய யோசனை ஒன்று தோன்றியுள்ளது. அதாவது ஹாட் பெட்டிங் என்ற ஐடியா வந்துள்ளது. அதாவது, இந்த ஹாட் பெட்டிங் முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும், இரண்டு நபர்கள் ஒரே படுக்கையில் பகிர்ந்து கொண்டாலும் நட்பு மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் அமல்படுத்தப்படுகிறது.

இப்படி படுக்கையை பகிர்ந்து கொள்ள மாதம் 60000 ஆயிரம் டாலர் வாடகை கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் அடிப்படையில் கிர்ந்து கொள்வலாம். இதுதொடர்பாக டிக்-டாக்கில் மோனிக் ஜெரேமியா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதுதான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Hanif Abbasi: இந்தியாவுக்குனு தனியாக ஆயுதக்கிடங்கு… இந்தியாவை நோக்கி 130 அணு ஆயுதங்கள் தயார்

இந்தியாவுக்கு என்று தனியாக ஆயுதக்கிடங்கை வைத்துள்ளோம்.இந்தியாவை நோக்கி மட்டும் 130 அணுஆயுதங்களை வைத்துள்ளோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் இருநாடுகள் இடையேயான பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ஆம் பிற்பகல் 3 மணி அளவில் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடும் தயாராகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாட்டின் படை வீரர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஏவுகணைகள், போர் விமானங்கள் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி நம் நாட்டின் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி பேசுகையில், சிந்து நதி நீரை நிறுத்தி வைத்தால் இந்தியா முழுநேர போருக்கு தயாராகி வருவதாக அர்த்தம். இந்தியாவுக்கு என்று தனியாக ஆயுதக்கிடங்கை வைத்துள்ளோம். அதில் கோரி, ஷாகின் மற்றும் காஸ்னவி ஏவுகணைகள் உள்ளன. 130 அணுஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை இலக்காக வைத்துள்ளது.

எங்களிடமும் ராணுவ ஆயுதங்கள் உள்ளன. ஏவுகணைகள் வைத்துள்ளோம். அணுஆயுதம் இருக்கும். இவை அனைத்தும் வெறும் காட்சி பொருளாக மட்டும் நாங்கள் வைத்திருக்கவில்லை. நாட்டில் நாங்கள் எங்கெல்லாம் அணு ஆயுதம் வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன் எங்களிடம் பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளது. அது உங்களை இலக்காக கொண்டு தாக்கும்” என ஹனிப் அப்பாஸி தெரிவித்துள்ளார்.

இறுதிச் சடங்கு செய்ய பணமில்லை… இறந்த உடலை அலமாரியில் 2 வருடமாக மறைத்து வைத்த மகன்

இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் காரணத்தால் தந்தையின் சடலத்தை 2 ஆண்டுகளாக வீட்டு அலமாரியில் ஒளித்து வைத்திருந்த மகனை கைது செய்யப்படுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 56 வயதான நோபுஹிகோ சுசுகி என்ற நபர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக உணவகம் திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை, நோபுஹிகோ சுசுகி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று இருந்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2023 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார்,

ஆனால் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு ( இறுதிச்சடங்கு செய்வதற்கு 1.3 மில்லியன் யென் அதாவது இந்திய மதிப்பில் ரூ.7.60 லட்சம்) செலவாகும் என்பதால், அதை தவிர்க்க தந்தையின் உடலை அலமாரியில் மறைத்து வைத்ததாக நோபுஹிகோ சுசுகி தெரிவித்தார். எனினும் தந்தையின் ஓய்வூதியத்தை 2 ஆண்டுகளாக பெற்று வந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

அட்டாரி வாகா எல்லை மூடல் எதிரொலி- இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா அறிவுறுத்தல்

அட்டாரி வாகா எல்லை மூடல் எதிரொலி- இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமான ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர்.

இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியாவிற்கான பயண ஆலோசனையை கனடா புதுப்பித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி கொந்தளிப்புடன் உள்ளதால் பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Danish Kaneria: வெட்கமாக இல்லையா..? பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை..!?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? வெட்கமாக இல்லையா? என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனரீயா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக ஜம்மு – காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருக்கிறார்கள். மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய ஊர்.

இந்த பஹல்காம் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.

இங்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அதிவேகமாக களம் இறங்கினார்கள். அப்போது திடீரென அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் காவல்துறை விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு, அண்மைக்காலமாகவே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தார்கள். மெல்ல மெல்ல நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எண்ணத்தை பயங்கரவாதிகள் அழிக்க வேண்டும் என்று நினைத்து தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனரீயா தனது எக்ஸ் பக்கத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? திடீரென உங்கள் படைகள் ஏன் திடீரென்று அதிக எச்சரிக்கையுடன் இருப்பது ஏன்? ஏனென்றால், நான்கு யோசித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை தெரியும் – நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என டேனிஷ் கனரீயா எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் நடத்தி 29 அப்பாவிகளை கொன்ற 4 பேர் இவர்கள் தான்..!

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளின் ஸ்கெட்ச் வரைபடம் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக ஒரேயொரு பயங்கரவாதி சம்பவ இடத்தில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது எடுத்த போட்டோ வெளியிடப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்து உள்ளது. போப் பிரான்சிஸிக்கு கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்து போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் வீடு திரும்பியனார்.

ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்து உள்ளது.

சீனா திட்டவட்டம்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் எவரையும் நாங்கள் எதிர்ப்போம்..!

சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்” என சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல் நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில், உலக நாடுகளுக்கான வரி விதிப்பை அமெரிக்காவின் விடுதலை நாளான டொனால்டு ட்ரம்ப் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ஜப்பான் பொருட்களின் மீது 24 சதவீதம், இந்திய பொருட்களின் மீது 27 சதவீதம், சீனா பொருட்களின் மீது 34 சதவீதம், வியட்நாம் பொருட்களின் மீது 46 சதவீதம், வங்கதேசம் பொருட்களின் மீது 37 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் பொருட்களின் மீது 20 சதவீதம், இந்தோனேசியா பொருட்களின் மீது 32 சதவீதம், பாகிஸ்தான் பொருட்களின் மீது 29 சதவீதம் மற்றும் தாய்லாந்து பொருட்களின் மீது 36 சதவீதம் என ஆகமொத்தம் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனாவும் வரிகளை விதித்தது. இதனால் மற்ற நாடுகளின் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்துவதாவும், சீனாவுக்கான வரிவிதிப்பை 245 சதேவீதமாகவும் அதிகரித்து அமெரிக்கா அறிவித்தது இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கான அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது.

இந்நிலையில், ‘சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்” என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீனா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் பல பரஸ்பர எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்’ என்று தெரிவித்துள்ளது. இவ்விரு வள்ளலரசுகளின் வர்த்தக போருக்கு இடையில் மற்ற நாடுகள் இரு தரப்பில் இருந்தும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன என்பதே உண்மை.

பென்குயின்கள் போராட்டத்தால் விழிபிதுங்கி நிற்கும் அதிபர் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்பை சுற்றி ஏராளமான பென்குயின்கள் கண்ணீர் மல்க நிற்க, மற்றொரு புறம் நாங்கள் வேறு நாடுகளுடன் வணிகத்தை தொடங்குவோம் என்று எச்சரிக்கை விடுக்க, எங்கள் மீதான வரிவிதிப்பை ரத்து செய்யுங்கள் என மன்றாடும் ஏராளமான பென்குயின்கள் ‘மீம்ஸ்கள்’ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதற்கான காரணம் என்ன என ஆராய்ந்தால் நமக்கு தலை சுற்றும்போது பென்குயின்களுக்கு கோபம் வராத என்ன.?

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல் நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில், உலக நாடுகளுக்கான வரி விதிப்பை அமெரிக்காவின் விடுதலை நாளான டொனால்டு ட்ரம்ப் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ஜப்பான் பொருட்களின் மீது 24 சதவீதம், இந்திய பொருட்களின் மீது 27 சதவீதம், சீனா பொருட்களின் மீது 34 சதவீதம், வியட்நாம் பொருட்களின் மீது 46 சதவீதம், வங்கதேசம் பொருட்களின் மீது 37 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் பொருட்களின் மீது 20 சதவீதம், இந்தோனேசியா பொருட்களின் மீது 32 சதவீதம், பாகிஸ்தான் பொருட்களின் மீது 29 சதவீதம் மற்றும் தாய்லாந்து பொருட்களின் மீது 36 சதவீதம் என ஆகமொத்தம் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த பட்டியலில் அன்டார்டிகாவில் உள்ள ஹியர்ட் மற்றும் மெக்டொனால்ட் ஆகிய 2 தீவுகள் இடம் பெற்று இருப்பது தான் இன்று சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ்கள்’ வைரலாகி வருவதற்க்கு காரணமாக உள்ளன. ஏன் என்றால் ஹியர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகள் தெற்கு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மக்கள் வசிக்காத ஆஸ்திரேலிய பிரதேசங்களாகும். இங்கு நிலவும் கடுமையான காலநிலை காரணமாக மனித வாழ்விடத்திற்கு பொருந்தாததாக அமைத்துள்ளது. ஆகையால். விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தீவுகளுக்கு குறுகிய காலத்திற்கு வருகை தந்து சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் வனவிலங்குகளைப் பற்றி ஆய்வு செய்கிறார்கள்.

மேலும் இந்த தீவுகளில் பென்குயின்கள் மட்டுமே வாழ்கின்றன. மனிதர்களே வசிக்காத இரு தீவுகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்திருக்கிறார். ஆகையால், மனிதர்கள் வசிக்காத ஹியர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்திருப்பதால், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ்கள்’ வைரலாக பரவி வருகின்றன.

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இந்தியா காரணமா..!?

இந்தியாவின் யுரேசிய பிளேட்டும் மியான்மரின் டெக்டானிக் பிளேட்டும் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு ‘ஆபரேஷன் பர்மா’ என்ற பெயரில் உணவு, கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான பொருட்களை இந்திய விமானப் படையின் C130J விமானம் மூலம் மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்துள்ளது.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “மியான்மர் ராணுவத் தலைவர் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்ளெய்ங்குடன் பேசினேன். பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழிப்புகளுக்காக ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டேன். மியான்மரின் நட்பு தேசம், அண்டை நாடு என்ற வகையில் இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா மியான்மர் மக்களுடன் தோளோடு தோள் நிற்கும் என்று உறுதியளித்தேன்.” என நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று காலை 11.50 மணி அளவில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களிலுள்ள கட்டிடங்கள் குலுங்கின. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு .8 ரிக்டர் அளவில் மீண்டும் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. இங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியிலுள்ள தாய்லாந்து, மலேசியா, லாவோஸ், வங்கதேசம், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்தன. தாய்லாந்தில் இதுவரை 10 பேரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாங்காக் நகரின் அடுக்குமாடி கட்டிடம் கட்டுமானப் பணியிடத்தில் 100-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மியான்மரில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கும் இந்தியாவுக்கும் புவி அமைப்பு அடிப்படையில் ஒரு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகளுக்கு இடையே உள்ளது. அதாவது, இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்டுகளுக்கு இடையில் அமைந்து இருக்கிறது. இதனால், இந்த நாடு நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் அபாயம் மிக்க பகுதிகளில் இருக்கிறது.

இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்கள் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் நேற்றைய தினம் ஏற்பட்ட அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் யுரேசிய பிளேட்டும் மியான்மரின் டெக்டானிக் பிளேட்டும் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.