கோவிட் -19 யை வீழ்த்த பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் தமிழ்நாடு அரசுடன் கைகோர்க்கும் விதமாக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் லயன்ஸ் கிளப் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை அதன் நிர்வாகிகள் அமைச்சர் கே.என் . நேரு அவர்களிடம் வழங்கினர்.
Category: Uncategorized
தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், “ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை கருதியே, சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டுமென்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12-வது வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி இதற்கான பல சட்ட போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.
சமூகநீதியை நிலைநாட்டும் வரலாற்று கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு இந்த கடமையை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்திட உறுதி பூண்டுள்ளது.
இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில் இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு ஏ.கே. இராஜன் அவர்கள் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மாநில கல்வி திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இறைச்சி கூடங்கள், மீன்சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதி
கோயம்புத்தூர் மாணவர் பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் கலந்துரையாடல்
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த 1-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டறிய மத்திய கல்வித்துறை மற்றும் சிபிஎஸ்இ வாரியம் இணைந்து காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திடீரென பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடி னார்.12-ம் வகுப்பு தேர்வு குறித்து அவர் எடுத்த முடிவு பற்றி மாணவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். நேரலையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 38 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் ஒருவராக கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி மாணவர் சித்ராகர் தேப்ரக் பங்கேற்று மோடியுடன் கலந்துரை யாடினார்.
காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் மரியாதை
குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் கோவிட் -19 தடுப்பூசி முகாமை தொடங்கி வைப்பு
சுகாதார துறை அதிரடி: முத்தூஸ் மருத்துவமனை கோவிட் -19 சிகிச்சை உரிமம் ரத்து
கோயம்புத்தூர் சரவணம்பட்டியை சேர்ந்த ஷாஜகான் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கோவிட் -19 அறிகுறிகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்த ஷாஜகான் மே 20-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் நதீமிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.16 லட்சம் கட்டணமாக கேட்டுள்ளனர்.
ஆனால் காப்பீடு செய்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் நதீம் கேட்டபோது ரூ.15 லட்சம் மருத்துவனை தரப்பில் கோரியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசீதுகளை வாங்கிப் பார்த்தபோது அதில் கட்டணமாக 11.55 லட்சம் என கட்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கூடுதலாக தொகையை நிர்ணயித்து மோசடி செய்ய முயன்றது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நதீம் நேற்று புகார் தெரிவித்தார். இந்த புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்த குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில், சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு அதிகாரிகள் விசாரணைக்கு சென்றனர்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகின்றது. விசாரணை அதிகாரிகள் கேட்ட ஆவணங்களையும் கொடுக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனைக்கு கோவிட் -19 சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ம அனுமதியை அதிகாரிகள் ரத்து செய்தனர். இதற்கான உத்திரவினை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவமனைக்கு வழங்கினார்.
மு.க.ஸ்டாலின் விமர்சனம்: பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ”நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனைச் சுமத்தியுள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தி – பொருளாதார தேக்க நிலைமை இருந்த நிதியாண்டில் கூட, உபரி நிதிநிலை அறிக்கையை விட்டுச் சென்றது திமுக ஆட்சி. ஆனால், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் – தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு – வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்புப் புகாருக்கு உள்ளாகியுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும் தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப் பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டார்கள்.
2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், தற்போது அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி. இது இறுதிக் கணக்கு வரும்போது இன்னும் அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும், நிதி பற்றாக்குறையும் வரிந்து கட்டிக்கொண்டு உயர்ந்து நிற்கின்றன.
திமுக ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக – 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டுவிட்டது. கொரோனா பேரிடருக்கு முன்பே – அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் – நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது.
2003ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அதிமுக அரசு. இதுவா வெற்றிநடை போடும் தமிழகம்? கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா?
கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடிய ஏழை – எளிய, நடுத்தரப் பிரிவு மக்களுக்கு உயிர் வாழ்வதற்கு நேரடிப் பண உதவியை, பலமுறை மன்றாடிக் கேட்டும், வழங்கிட முன்வரவில்லை. நிவர் புயல் உள்ளிட்ட பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவில்லை. ஆனால் ஊழல் டெண்டர்களும் – கமிஷன் வசூலும் கடைசி வரை ஓயவில்லை.
தற்போது 1000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை எடுத்து, தண்ணீராக தாராளமாக வாரி இறைத்து, விளம்பரங்கள் வழங்குவதிலும் ஊழல் செய்து, தன்னை ஏதோ வாராது வந்த மாமணியைப் போல், தனிப்பட்ட முறையில் ஊதிப் பெருக்கி முன்னிறுத்திக் கொள்ள – தமிழகத்தின் நிதி ஆதாரத்தில் கை வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.
தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து – அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதல்வர். அதிமுக ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
2011 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் நிதி நிலை மிக மோசமானதன் விளைவாக 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்து சரிந்துவிட்டது என்று அதிமுகவின் கூட்டணிக் கட்சியான மத்திய பாஜக அரசின் 15ஆவது நிதிக்குழுவின் அறிக்கையே சொல்கிறது.
பெட்ரோல் – டீசல் ஆகியவற்றின் மீது வரிகளை ஏற்றி – இன்றைய பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கும், விலைவாசி அதிகரிப்புக்கும் காரணமான முதலமைச்சர் பழனிசாமி – கொரோனா நிதியிலும் ஊழல் செய்து – உயிர் காக்கும் நிதியில் கூட வேட்டை ஆடியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய்ப் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது.
இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் – ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அதிமுக அரசு சுமத்திவிட்டுச் செல்கிறது. பெட்ரோல் – டீசல் மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த 87 ஆயிரம் கோடி எங்கே போனது என்றே தெரியவில்லை? உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி – ஜி.எஸ்.டி. வருவாய் வரி நிலுவைத் தொகை, நபார்டு நிதி, சர்வதேச நிதி நிறுவனங்கள் அளித்த நிதி அனைத்திலும் அமைச்சர்களும் – முதல்வரும் போட்டி போட்டுக் கொண்டு ‘கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்’ என்று வாரிச் சுருட்டி, அப்பாவி மக்களின் வயிற்றில் ஓங்கி அடித்து இருக்கிறார்கள்.
தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் – உருப்படியான உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. வேலைவாய்ப்பும் இல்லை, தொழிற்சாலையும் இல்லை என்பதை விட – மூலதனச் செலவுகளுக்கே நிதி ஒதுக்காத மாநிலங்களின் பட்டியலில் கீழே விழுந்து கிடக்கும் நிலையைத் தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி – இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டார்கள்.
கஜானாவை முற்றும் காலி செய்தும், இன்னும் இந்த இருவரின் கோரப்பசி அடங்கவில்லை. எந்தத் திட்டத்தில் எவ்வளவு ஊழல் செய்ய முடியும் என்று பேயாட்டம் ஆடுகிறார்கள். கொரோனா காலத்தில் வாங்கும் கடன்களிலும் கமிஷன் அடிப்பதை பழனிசாமியும், அவர் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் – நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சரவைப் பணி போல் செய்து – ‘கடைசி நேர டெண்டர்கள்’ ‘கடைசி நேர கமிஷன்களுக்கு’ தலையாய முக்கியத்துவம் கொடுத்து, முறைகேடுகளில் மூழ்கி இருக்கிறார்கள்.
தமிழக நிதி மேலாண்மை தறிகெட்டுப் போனதற்கு, இந்த இணைந்த ஊழல் கரங்கள்தான் காரணம். தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் நிதியமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும் – ஏன் அதிமுக ஆட்சியும் ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்நாடு நிதி நிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் கீழ் ‘நிதி நிலை அறிக்கையின் இலக்கு குறித்து’ ஆறு மாதத்திற்குள் வைக்க வேண்டிய ஆய்வு அறிக்கையைக் கூட தாக்கல் செய்யாத, தனது அலுவல் பொறுப்பு உணராத ஒரே நிதியமைச்சர் – நாட்டில் நிதி மேலாண்மையில் தோற்றுப் போன மிக மோசமான ஒரு நிதியமைச்சர் என்றால் – அது ஓ.பன்னீர்செல்வமாகவே இருக்கும்.
இப்படியொரு நிதியமைச்சரை இதுவரை தமிழகம் கண்டதில்லை. அந்த அளவிற்கு ஒரு கேடுகெட்ட நிதி நிர்வாகத்தை அளித்துள்ள முதல்வரையும் இதுவரை தமிழகம் பார்த்ததில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடனைச் சுமத்திவிட்டு – திமுக ஆட்சியில் இருந்ததை விட ஐந்து மடங்கு கடனை வாங்கி ஊழலில் திளைத்து சுகமான ஆட்சி நடத்தி – வெற்று அறிவிப்புகளைச் செய்தே காலம் கடத்தி, கடைசி நேரத்தில் காரியத்திற்கு ஆகாத கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும் – கூட்டத் தொடரையும் திமுக புறக்கணிக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் பேராதரவுடன், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் – ‘ஊழலுக்கு இணைந்த அதிமுகவின் இந்தக் கறைபடிந்த கரங்கள்’ – ஒரு அரசின் செலவுகளில், கடனுக்கு வட்டி கட்டுவதே இரண்டாவது பெரிய செலவு என்ற அளவிற்கு நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து – தமிழகத்தின் நிதி நிலைமை – தமிழக மக்களுக்காக – தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக – என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் வேகமாகச் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோவையில் விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி…
கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 4-வது முறையாக கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி செட்டிபாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1000-த்திற்கும் அதிகமான காளைகள், 750-த்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். கொரோனா சான்றிதழ் வைத்திருந்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாடுபிடி வீரர்கள் மாடுகளை துன்புறுத்த மாட்டோம் என அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
முதல் காளையாக கோவில் காளை வாடிவாசல் வழியாக களத்திற்கு வந்தது. அதனை பிடிக்க கூடாது என அறிவிக்கப்படவே மாடுபிடி வீரர்கள் ஓரமாக நின்றனர். அதனை தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளைகள் களத்தில் சிறிது நேரம் நின்று வீரர்களுக்கு விளையாட்டு காட்டியது. அதனை அடக்க முயன்ற வீரர்களையும் தூக்கி பந்தாடியது. ஒரு சில காளைகளை வீரர்கள் அதன் திமிலை பிடித்து அடக்கினர்.
போட்டியில் வென்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாடு பிடி வீரர் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு மாருதி கார்கள் பரிசாக வழங்கப்படுகிறது.