சாதனைகளைச் சரித்திரமாக்கும் கிங் கோலி

உலகின் எந்த கிரிக்கெட் வீரரின் உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய விரும்புகிறீர்கள் என தொகுப்பாளரின் கேள்விக்கு, தயக்கமே இல்லாமல் விராட் கோலிதான் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொல்லும் அளவிற்கும் “விராட் கோலி” ஒரு மன்னன், அவர் ஆலோசகர். கேப்டன் நிச்சயமாக அவரது ஆலோசனைகளை கேட்க வேண்டும் என அதிரடி சொந்தக்காரர் வீரேந்தர் சேவாக் வர்ணனை செய்யும் அளவிற்கும், சிறந்த ஒரு வீரர்.

பேஸ்புக்கில் 49 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள், இன்ஸ்டாகிராமில் 250 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள், ட்விட்டரில் 50 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் என சமூக வலைத்தளங்களில் 310 மில்லியன் அதிகமான ரசிகர்கள் உள்ள ஆசியாவிலேயே இதுவரை யாரும் அடையாத உச்சத்தை விராட் கோலி அடைந்து பல புதிய சாதனைகளுக்கு மேலும் ஒரு சாதனையை படைத்த காரணத்தால் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில்  நடைபெற உள்ள 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட விராட் கோலியின் செல்வாக்கு ஒரு முக்கிய காரணம் என்று ஒலிம்பிக் இயக்குனர் நிக்கோலோ காம்ப்ரியானி தெரிவிதுள்ளார்.

உலகின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட  கால்பந்துக்கு அடுத்த கிரிக்கெட் விளையாட்டின் 18-வது IPL சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதுவரை நடந்துள்ள 17 சீசன்களில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில் 18-வது IPL கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ந் தேதி  தொடங்கி மே 25-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை, மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் லீக்கில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.

2008 -ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற கையோடு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட ஐபிஎல் சாதனையை விராட் கோலி செய்து. மிரள வைத்து கொண்டுள்ளார். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1,053 ரனகளும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 1,057 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்கு எதிராக 1,030 ரன்களும் அடித்து சாதனை படைத்த  விராட் கோலி இந்த போட்டியில் 38 ரன் அடித்தபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த IPL  தொடரில் விராட் கோலி நான்கு அணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் குவித்து மிகப்பெரிய IPL  சாதனையை செய்து இருக்கிறார்.

18-வது IPL  சீசனில் விராட் கோலி விளையாட வந்தாலே இன்று எந்த சாதனையை முறியடிக்க போகின்றார் என கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் எதிர்பார்ப்பு தொடங்கியது. அந்த வகையில் மார்ச் 28 -ந் தேதி நடைபெற்ற 8-வது லீக் சுற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிராக போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16 ஆண்டுகளாக வீழ்த்தவே முடியாமல் இருந்த தொடர் தோல்விகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும் இந்த லீக் சுற்றில் விராட் கோலி 31 ரன்கள் அடித்தார். இதன் மூலம் IPL வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஷிகர் தவான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிராக 1,057 ரன்கள் அடித்திருந்த நிலையில் விராட் கோலி 1,084 ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

மேலும் ஏப்ரல் 7 -ந் தேதி நடைபெற்ற IPL  20-வது லீக் சுற்றில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிராக போட்டியில்  விராட் கோலி 67 ரன்கள் அடித்தார். அப்போது T 20 -ல் 13,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி செய்தார். மேலும் உலக அளவில் T-20 ல் 13,000 ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.

மேலும் ஏப்ரல் 7 -ந் தேதி நடைபெற்ற IPL  20-வது லீக் சுற்றில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிராக போட்டியில்  விராட் கோலி 67 ரன்கள் அடித்தார். அப்போது T 20 -ல் 13,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி செய்தார். மேலும் உலக அளவில் T-20 ல் 13,000 ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.

மேலும் ஏப்ரல் 10 -ந் தேதி நடைபெற்ற IPL  24-வது லீக் சுற்றில் சின்னசாமி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிராக போட்டியில்  விராட் கோலி 22 ரன்கள் அடித்தார். ஐபிஎல் தொடரில் 8190 ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி அடைந்தார். மேலும் அதில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். IPL வரலாற்றில் 721 பவுண்டரிகள் , 280 சிக்ஸர்களுடன் 1000 பவுண்டரியை கடந்ததன்  மூலம் IPL வரலாற்றிலேயே அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பெருமை விராட் கோலி பெற்றார்.

மேலும் ஏப்ரல் 20 -ந் தேதி நடைபெற்ற IPL  37-வது லீக் சுற்றில் பஞ்சாபிலுள்ள முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ்அணிக்கு எதிராக போட்டியில்  விராட் கோலி 73 ரன்கள் அடித்து   67-வது அரைசதம்  ஆகும். இதன் மூலம் IPL  வரலாற்றல் 50-க்கும் அதிகமான ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார்.

ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்ற IPL  42-வது லீக் சுற்றில் சின்னசாமி  மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக போட்டியில்  விராட் கோலி 70 ரன்கள் அடித்து மூலம் T-20 வரலாற்றில் 100-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மேலும் IPL  வரலாற்றல் 50-க்கும் அதிகமான ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஏப்ரல் 27 -ந் தேதி நடைபெற்ற IPL  46-வது லீக் சுற்றில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் விராட் கோலி 51 ரன்கள் அடித்து மூலம் இந்த சீசனில் 5-வது  அரைசத்தை பூர்த்தி செய்து 443 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்து ஆரஞ்ச் தொப்பியை  கைப்பற்றினார். மேலும் இதுவரை நடைபெற்ற IPL  11 சீசன்களில் 400-க்கும் அதிகமான ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை “ரன் மெஷின்” விராட் கோலி படைத்துள்ளார்.

அடுத்து மே 3 -ந் தேதி நடைபெற்ற IPL  52-வது லீக் சுற்றில் சின்னசாமி மைதானத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணிக்கு எதிராக போட்டியில் விராட் கோலி 62 ரன்கள் அடித்து மூலம் இந்த சீசனில் 7-வது  அரைசத்தை பூர்த்தி செய்து 505 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்து மீண்டும் ஆரஞ்ச் தொப்பியை  கைப்பற்றினார். மேலும் விராட் கோலி தொடர்ச்சியாக அடித்த 4-ஆவது அரைசதம். அதேவேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 10-வது அரை சதம் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். பெங்களூரு அணிக்காக அவர், இதுவரை ஒட்டுமொத்தமாக 304 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த வகையில் T- 20- வரலாற்றில் ஓர் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையும்  விராட் கோலி வசம்  சென்றது.  மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 1,146 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி, IPL வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

சேசிங் மாஸ்டர் ஜெர்சி எண்18 “ரன் மெஷின்” விராட் கோலி  IPL சீசன்-18 -ல் ஒவ்வொரு நாளும் அதிரடியாக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்து அந்த சாதனைகளையே சரித்திரமாக மாற்றி கொண்டுள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.

IPL -2025: KL. ராகுல் “ஆக்ரோஷமாக” செய்ததை “நக்கலாக” செய்து காட்டிய விராட் கோலி..!

“இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என “ஆக்ரோஷமாக” KL. ராகுல் செய்ததை “நக்கலாக” விராட் கோலி செய்து காட்டினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. IPL -2025 தொடரின் 24-வது லீக் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த KL. ராகுல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து சேசிங்கை முடித்து வைத்தார். அந்த வெற்றிக்குப் பிறகு, தனது சொந்த ஊரான பெங்களூருவில் தான் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டும் வகையிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஐபிஎல் ஏலத்தில் வாங்கவில்லை என்ற கோபத்தை வெளிக்காட்டும் வகையிலும், அவர் ‘இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என பேட்டை வைத்து “ஆக்ரோஷமாக” சைகை செய்து காட்டினார்.

அது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த விராட் கோலி தனது சொந்த ஊரான டெல்லியில் வைத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி விட்டு இதேபோல பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதோபோலவே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. விராட் கோலி நிதானமாக விளையாடி 47 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். க்ருனால் பாண்டியா அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

போட்டிக்குப் பிறகு, KL. ராகுல் “இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என பேட்டை வைத்து “ஆக்ரோஷமாக” சைகை செய்தது போலவே, விராட் கோலியும் அவர் முன் “நக்கலாக” அதே சைகையை செய்து காட்டினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

IPL 2025: 17 பந்துகளில் அரைசதம்..! 35 பந்துகளில் சதம் அடித்து இமாலய சாதனை படைத்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி

14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் அடித்து சதம் அடித்து இமாலய சாதனை படைத்தார். IPL -2025 தொடரின் 47-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலப்பரீட்சை நடத்த வருகின்றன.ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 93 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 30 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜாஸ் பட்லர் சுப்மன் கிலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சுப்மன் கில் 29 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 50 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் அடித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி 16. 4 ஓவரில் 167 ரன்கள் எடுத்திருந்த போது மொரவக்ககே மகேசு தீக்சனவின் பந்து வீச்சில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழக்க ஜாஸ் பட்லருடன் டெவாட்டியா ஜோடி சேர 20 ஓவர் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க வீரர்களாக 14 வயதாகும் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். – யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் ரேட் கிட்டத்தட்ட இருந்தது.  மேலும் அதிரடியாக விளையாடிய  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் அடித்து சதம் அடித்து இமாலய சாதனை படைத்தார்.

IPL 2025: ஆயுஷ் மாத்ரேவை தட்டிக்கொடுத்த சூர்யகுமார் யாதவ்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான மிக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

18 -வது IPL தொடரின் 38-வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் 8-வது இடத்திலுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் 10-வது இடத்திலுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பிளே ஆப் சுற்று முன்னேற வதற்கான பலப்பரீட்சை நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை CSK அணி எடுத்துள்ளது.இதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே IPL தொடரில் அறிமுகமாகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே விக்கெட் இழந்து வெளியேறிய போது சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

IPL -2025: அழுது கொண்டே பெவிலியன் திரும்பிய வைபவ் சூர்யவன்ஷி

IPL வரலாற்றிலேயே 14 வயதில் களமிறங்கிய முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. IPL -2025 தொடரின் 36-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் கேப்டன் பொறுப்பை ரியான் பராக் ஏற்றுக் கொண்டார்.

அதேபோல் இந்த போட்டியில் 14 வயதாகும் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலமாக IPL வரலாற்றிலேயே 14 வயதில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை விளாசியது.

இதன்பின் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை வீச ஷர்துல் தாக்கூர் வந்தார். இந்த ஓவரிம் 4-வது பந்தை எதிர்கொள்ள வைபப் சூர்யவன்ஷி வாய்ப்பு கிடைத்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் கொஞ்சம் விலகி சென்று கவர்ஸ் திசையை நோக்கி சிக்ஸ் அடித்து அலற வைத்தார்.

IPL தொடரில் விளையாடிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் அடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆவேஷ் கான் வீசிய 2-வது ஓவரிலும் சிக்ஸ் விளாசி அசத்தினார். IPL மெகா ஏலம் நடைபெற்ற போது வைபவ் சூர்யவன்ஷிக்கு வயது 13 அவரின் அடிப்படை விலை 30 லட்சமாக தான் இருந்தது. ஆனால் பல அணிகளும் அவருக்காக போட்டி போட்ட அவருடைய விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வரை உயர்ந்து.

இந்நிலையில் 14 வயதிலேயே பயிற்சி முகாமில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவருக்கு முதல் முறையாக இந்த தொடரில் வாய்ப்பு வழங்கியது. திடீரென சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக வந்து முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இளங்கன்று பயம் அறியாது என்ற பழமொழியை போல கொஞ்சம் கூட பயமே இன்றி சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்களின் பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரியாக அவர் விரட்டினார். வெறும் இருபதே பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என 170 ஸ்ட்ரைக் ரேட்டில் 34 ரன்கள் அடித்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் ரேட் பத்துக்கு மேல் இருந்தது. இந்நிலையில், யஷஸ்வி – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணியை பிரிக்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 7 ஓவர்கள் முடிவதுற்குள் 6 பந்து வீச்சாளர்களை மாற்றியும் பயனில்லை.

இத்தனை தொடர்ந்து ரிஷப் பண்ட் மீண்டும் எய்டன் மார்க்ரமிற்கு இரண்டாவது ஓவர் கொடுத்தார். இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.4 ஓவரில் 85 ரன்கள் இருந்தபோது ரிஷப் பண்டின் அபார ஸ்டம்பிங்கில் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் மனமுடைந்த வைபவ் சூர்யவன்ஷி அழுது கொண்டே பெவிலியன் நோக்கி திரும்பினார்.

IPL -2025: முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த 14 வயது இளங்கன்று வைபவ் சூர்யவன்ஷி..!

IPL வரலாற்றிலேயே 14 வயதில் களமிறங்கிய முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. IPL -2025 தொடரின் 36-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் கேப்டன் பொறுப்பை ரியான் பராக் ஏற்றுக் கொண்டார்.

அதேபோல் இந்த போட்டியில் 14 வயதாகும் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலமாக IPL வரலாற்றிலேயே 14 வயதில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை விளாசியது.

இதன்பின் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை வீச ஷர்துல் தாக்கூர் வந்தார். இந்த ஓவரிம் 4-வது பந்தை எதிர்கொள்ள வைபப் சூர்யவன்ஷி வாய்ப்பு கிடைத்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் கொஞ்சம் விலகி சென்று கவர்ஸ் திசையை நோக்கி சிக்ஸ் அடித்து அலற வைத்தார்.

IPL தொடரில் விளையாடிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் அடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆவேஷ் கான் வீசிய 2-வது ஓவரிலும் சிக்ஸ் விளாசி அசத்தினார். IPL மெகா ஏலம் நடைபெற்ற போது வைபவ் சூர்யவன்ஷிக்கு வயது 13 அவரின் அடிப்படை விலை 30 லட்சமாக தான் இருந்தது. ஆனால் பல அணிகளும் அவருக்காக போட்டி போட்ட அவருடைய விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வரை உயர்ந்து.

இந்நிலையில் 14 வயதிலேயே பயிற்சி முகாமில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியதால் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி அவருக்கு முதல் முறையாக இந்த தொடரில் வாய்ப்பு வழங்கியது. திடீரென சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக வந்து முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

IPL 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி..!

IPL 2025 சீசனின் நாளாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. 18-வது IPL 2025 சீசனின் நாளாவது போட்டி விசாகப்பட்டினம் ACA சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக எய்டென் மார்க்கரம் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 4.4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 13 பந்துகளில் 15 ரன்கள் அடித்த எய்டென் மார்க்கரம் விப்ராஜ் நிகமிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் மிட்செல் மார்ஷுடன் ஜோடி சேர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதற அடிக்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ரன்ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 11.4 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 6 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்கள் என 72 ரன்கள் எடுத்தபோது முகேஷ் குமாரிடம் ஆட்டமிழந்தார் , அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னாள் தலைவர் ரிஷப் பந்த் ரன் எடுக்காமல் ஆட்டமிழக்க நிக்கோலஸ் பூரான் 30 பந்துகளில் 6 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்கள் என 75 ரன்கள் எடுத்தார்.

அதே போன்று டேவிட் மில்லர் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது.

இதனை தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர் மற்றும் பாஃப்’ டு பிளெசீ களமிறங்கினர். ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்கமே மிக மோசமாக அமைத்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரின் 3 -வது பந்தில் ஜேக் ஃப்ரேசர் 1 ரன் எடுத்து நடையை கட்ட 5 -வது பந்தில் அபிஷேக் போரெல் ஷர்துல் தாக்கூரிடம் ஆட்டமிழந்து டக்அவுட் வெளியேற முதல் ஓவர் முடிவில் 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய சமீர் ரிஷி 4 ரன்கள் எடுத்திருந்த போது 1.4 ஓவரில் மணிமாறன் சித்தார்திடம் ஆட்டமிழந்து வெளியேற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏழு ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து பாஃப்’ டு பிளெசீ மற்றும் கேப்டன் அக்சர் பட்டேல் ஆகியோர் பொறுப்பாக விளையாடிய ரன்களை சேர்த்தனர். ஓரளவுக்கு அதிரடி காட்டத் தொடங்கிய அக்சர் பட்டேல் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

பாஃப்’ டு பிளெசீ 29 ரன்களில் வெளியேற 12.3 ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 113 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 45 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தால் வெற்றி கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் தோல்வி உறுதி என எதிர்பார்த்த நிலையில் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ஆஸ்டோஷ் சர்மா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்துவீச்சில் வான வேடிக்கை காட்டினார். இவருடன் சேர்ந்து விபராஜ் நிகம் அதிரடியாக விளையாடினர். கடைசி 27 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தனர். ஒரு கட்டத்தில் கடைசி மூன்று ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டபோது ஆஸ்டோஸ் சர்மா 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 18 ரன்களை எடுத்தார்.

இதனால் இலக்கு 12 பந்துகளுக்கு 22 ரன்கள் என மாறியது. 19 வது ஓவரில் 2 பவுண்டரி ஒரு சிக்சர் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அடிக்க கடைசி ஓவரில் வெறும் ஆறு ரன்கள் தான் தேவைப்பட்டது.இதில் மூன்றாவது பந்தில் ஆஸ்டோஷ் சர்மா சிக்சர் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Car Racing: இத்தாலியில் சாதித்த அஜித் குமார் ரேஸிங் அணி..!

நடிகர் அஜித்குமார் கார் ரேஸிங்கில் இத்தாலி நாட்டில் நடந்த ரேஸிலும் 3-வது இடம் பிடித்து அஜித்குமார் ரேஸிங் சாதனை படைத்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே கார் ரேஸிங்கில் சாதித்த அஜித்குமார் அப்போது ஏற்பட்ட காயத்தால் கார் ரேஸிங்கில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். இதற்கிடையே இப்போது மீண்டும் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அவர் இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் தனியாக கார் ரேசிங் டீமையும் ஆரம்பித்து இருந்தார்.

முதற்கட்டமாகக் கடந்த ஜனவரி மாதம் நடந்த 24 மணி நேர கார் ரேஸில் அவரது அணி பங்கேற்றது. அதில் மிகச் சிறப்பாக அஜித்குமார் ரேஸிங் அணி செயல்பட்ட நிலையில், 3-வது இடத்தை பிடித்தது. துபாயை தொடர்ந்து பல்வேறு நகரங்களிலும் கார் ரேஸ் நடந்து வருகிறது. இத்தாலி கார் ரேஸ் அதில் தொடர்ச்சியாக அஜித் குமார் அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அதன்படி இப்போது இத்தாலி நாட்டில் நடந்த கார் ரேஸிங்கிலும் அஜித்குமார் அணி பங்கேற்றுள்ளது. இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற முகெல்லோ சர்க்யூட் இல் இந்த போட்டி நடந்தது.

அதில் 12-ஹெச், அதாவது 12 மணி நேரம் தொடர்ந்து கார் ஓட்டும் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. இதில் GT992 பிரிவில் அஜித் அணி களமிறங்கியது.. 3-வது இடம் பிடித்த அஜித் இந்த ரேஸில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அஜித் குமார் ரேஸிங் அணி, அதில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளது.. துபாயைத் தொடர்ந்து இப்போது இத்தாலி சுற்றிலும் அஜித் குமார் ரேஸிங் அணி 3-ம் பிடித்துள்ளது.

IPL 2025: ஆர்.சி.பி.க்கு யாரு கேப்டனா இருந்தாலும் “கிங் கோலி” சொன்னா கேட்கணும்..!

“விராட் கோலி” ஒரு மன்னன், அவர் ஆலோசகர். கேப்டன் நிச்சயமாக அவரது ஆலோசனைகளை கேட்க வேண்டும் என வீரேந்தர் சேவாக் தெரிவித்தார். 18-வது IPL 2025 சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டு வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது. மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்தித்தது. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹேசில்வுட் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் எடுத்திருந்த குவின்டன் டி காக்.ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் அஜின்கியா ரஹானே, சுனில் நரைனுடன் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 103 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், அஜின்கியா ரஹானே 25 பந்துகளில் அரை சதம் பதிவு செய்த போது சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ரஷிக் தர் சலாம் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் 56 ரன்கள் எடுத்த நிலையில் அஜின்கியா ரஹானே வெளியேறினார்.

பின்னர் வந்த கொல்கத்தா அணியின் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மற்றும் ரஸ்ஸல் என மூவரும் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது. க்ருனல் பாண்டியா 3, ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் ஆர்சிபி தரப்பில் வீழ்த்தினர். சுயாஷ், ரஷிக், யஷ் தயாள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 8.3 ஓவரில் 95 ரன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்திருந்த நிலையில் பிலிப் சால்ட் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இம்பேக்ட் வீரராக தேவதூத் பாடிக்கல் விராட் கோலியுடன் இணைந்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.4 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவதூத் பாடிக்கல் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் பட்டிதார் விராட் கோலியுடன் இணைந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க லியம் லிவிங்ஸ்டன், 5 பந்துகளில் 15 ரன்கள் மற்றும் விராட் கோலி 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் இடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார் விராட் கோலி சொல்வதை அவ்வப்போது கேட்டு அப்படியே செயல்படுத்தினார். அதாவது, குவின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்துவதற்கு ரஜத் படிதாருக்கு விராட் கோலி ஆலோசனை அளித்தார். அந்த ஆலோசனையை ரஜத் படிதார் அப்படியே கேட்டு பந்து வீச்சாளரிடம் அதை செய்யுமாறு சொன்னார். அதற்கு அடுத்த சில பந்துகளிலேயே குவின்டன் டி காக் ஆட்டம் இழந்தார். அப்போது, வர்ணனையில் பேசிய வீரேந்தர் சேவாக், “விராட் கோலி ஒரு மன்னன், அவர் ஆலோசகர்.

கேப்டன் நிச்சயமாக அவரது ஆலோசனைகளை கேட்க வேண்டும். விராட் கோலி குவின்டன் டி காக்குக்கு எதிராக அதிக முறை விளையாடி இருக்கிறார், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக முறை விளையாடி இருக்கிறார். அவர் ரஜத் படிதாருக்கு குவின்டன் டி காக் விக்கெட்டை எப்படி வீழ்த்த வேண்டும், அவரது பலவீனம் என்ன என்பதை பற்றி சொன்னார். அந்தத் தகவலை கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சாளரிடம் சொன்னார். பந்து வீச்சாளர் குவின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார்” என வீரேந்தர் சேவாக் தெரிவித்தார்.

IPL 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு..!

IPL 2025 சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டு வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது. 18-வது IPL தொடர் மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்தித்தது. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹேசில்வுட் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் எடுத்திருந்த குவின்டன் டி காக்.ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் அஜின்கியா ரஹானே, சுனில் நரைனுடன் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 103 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், அஜின்கியா ரஹானே 25 பந்துகளில் அரை சதம் பதிவு செய்த போது சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ரஷிக் தர் சலாம் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் 56 ரன்கள் எடுத்த நிலையில் அஜின்கியா ரஹானே வெளியேறினார்.

பின்னர் வந்த கொல்கத்தா அணியின் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மற்றும் ரஸ்ஸல் என மூவரும் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது. க்ருனல் பாண்டியா 3, ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் ஆர்சிபி தரப்பில் வீழ்த்தினர். சுயாஷ், ரஷிக், யஷ் தயாள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 8.3 ஓவரில் 95 ரன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்திருந்த நிலையில் பிலிப் சால்ட் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இம்பேக்ட் வீரராக தேவதூத் பாடிக்கல் விராட் கோலியுடன் இணைந்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.4 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவதூத் பாடிக்கல் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் பட்டிதார் விராட் கோலியுடன் இணைந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க லியம் லிவிங்ஸ்டன், 5 பந்துகளில் 15 ரன்கள் மற்றும் விராட் கோலி 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.