சீமான்: கோயில் கருவறை நாம் உருவாக்கியது..! தாயின் கருவறை நம்மை உருவாக்கியது..!

கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், நாம் தமிழர் கட்சிநமக்கு உயிர் கொடுக்கும் தாய்மையை கொண்டாடும் விதமான அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு அன்னையர் தின மே 11-ந் தேதி இன்று கொண்டாடப்படுகிறது.

சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!’ என்கிறார் நபிகள் நாயகம்!

ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!

ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!

எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்!

ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது!

மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்!

இந்த உலகில் நீ எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் உன்னைக் கண்டு பொறாமைப்படாத ஒரேயொரு உயிர் உண்டென்றால், அது உன்னைப் பெற்ற தாய்தான்!

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!

கண்கள் இல்லாமல் பார்த்தேன்!

காற்று இல்லாமல் சுவாசித்தேன்!

கவலையில்லாமல் வாழ்ந்தேன்!

என் தாயின் கருவறையில்!

கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது!

அதனால்தான் உலகப் பந்தங்கள் எல்லாவற்றையும் துறந்து, துறவியான பட்டினத்தடிகளார் கூட, தாய்ப்பாசத்தை மட்டும் துறக்க முடியாமல்,

‘ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி’ என்று உருகுகிறார்.

அன்னையைப் போலொரு தெய்வமில்லை;

அவர் அடிதொழ மறப்பவர் மண்ணில் மனிதரில்லை!

நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறு ஏது?

தாய்மையைப் போற்றுவோம்!

தாய்மையை வணங்குவோம்!

நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்! என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.