2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. குரூப் ஏ பிரிவில் இந்திய அணி 6 புள்ளிகள் பெற்று தற்போது முதல் இடத்தில் உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணி 15 ரன்கள் எடுத்து 2.5 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க 5.1 ஓவரில் 17 பந்துகளை சந்தித்த ரோஹித் சர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க 6.4 ஓவரில் இந்திய அணி 30 ரன்கள் எடுத்து 14 பந்துகளை சந்தித்த விராட் கோலி 11 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் எதிர்பாராத வகையில் ஆட்டம் இழந்தார்.
இந்த இக்கட்டான நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 29.2 ஓவரில் இந்திய அணி 128 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 61 பந்துகளை சந்தித்த அக்சர் படேல் 42 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். 36.2 ஓவரில் இந்திய அணி 172 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 98 பந்துகளை சந்தித்த அக்சர் படேல் 79 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இறுதியில் கே எல் ராகுல் 23 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் மாட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசித்தனர்.
இதனையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா ஆறு ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு வில்லியம்சன் ஜோடி அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த நிலையில் ரோஹித் சர்மா 12- வது ஓவரை வீச சக்கரவர்த்தி அழைத்தார்.
11.3 ஓவரில் நியூசிலாந்து 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 35 பந்துகளை சந்தித்த வில் யங் 22 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனை தொடர்ந்து டேரல் மிட்செல் 17 ரன்களிலும் டாம் லாத்தம் 14 ரன்களிலும் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளன் பிலிப்ஸ் 12 ரன்களிலும், பிரேஸ்வெல் இரண்டு ரன்களிலும் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
எனினும் கடைசிவரை நின்று இந்திய அணிக்கு பயம் காட்டிய நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வில்லியம்சன் 40.6 ஓவரில் நியூசிலாந்து 169 ரன்கள் எடுத்திருந்த நிலையில்120 பந்துகளை சந்தித்த 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இறுதியில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாட்னர் 28 ரன்கள் எடுத்து அதிரடி காட்ட அவரையும் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். இதன் மூலம் 45.3 ஓவரில் நியூசிலாந்து அணி 205 ரன்களில் ஆட்டம் இழந்தது.
நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய குரூப் ஏ பிரிவில் இந்திய அணி 6 புள்ளிகள் பெற்று தற்போது முதல் இடத்தில் உள்ளது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சாம்பியன் டிராபி தொடரில் தாம் விளையாடிய முதல் போட்டியிலே 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா, அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் கைப்பற்றினர்