பிரபல புற்றுநோய் நிபுணரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவருமான மருத்துவர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவரது நினைவு அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.