சுவிஸ் ஈழப் போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை..! பெரியாருக்கு எதிராக பிரபாகரன் முன்னிறுத்தி விவாதிப்பதை சீமான் நிறுத்த வேண்டும்..!

பொதுவெளியில் பெரியாருக்கு எதிராக தலைவரை வைத்து விவாதத்திற்கு அழைக்கும் சீமான் உடனடியாக இதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் எமது கடுமையான எதிர்வினையாற்றலை எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஈழத் தமிழ் போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இருந்து ஈழத் தமிழ் போராளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் சதுரங்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும் எமது போராட்டத்தையும் விவாதப்பொருளாக்குவதை பார்த்து மனவேதனைப்படுகிறோம். இது தொடர்பாக எமது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறோம்.

இதன் தொடர்ச்சியாக தலைவரின் பெறாமகனான கார்த்திக் மனோகரனை பொதுவெளியில் மரியாதைக் குறைவாக பேசியது எமது இனத்தை அவமானப்படுத்தியது போலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். வேலுப்பிள்ளை மனோகரன் குடும்பம், மாவீரர் குடும்பங்களில் ஒன்று. தேசியத் தலைவர் அவர்கள் உறவுகளை முதன்மைப்படுத்துபவரல்ல இருந்தாலும் சாள்ஸ் அன்ரனி துவாரகா என்ற இரண்டு மாவீரர்களை இந்த தேசவிடுதலைக்காக கொடுத்தவர்கள். தமிழீழ நடைமுறை அரசில் மாவீரர்கள் குடும்பத்தினரை எவ்வாறு தலைவர் அவர்கள் மதிப்பளிப்பார்,என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

எனவே மாவீரர் குடும்பம் ஒன்றின் உறுப்பினர்களை அவமரியாதை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பொதுவெளியில் பெரியாருக்கு எதிராக தலைவரை வைத்து விவாதத்திற்கு அழைக்கும் சீமான் உடனடியாக இதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் எமது கடுமையான எதிர்வினையாற்றலை எதிர்கொள்ள நேரிடும் என ஈழப் போராளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

அன்பில் மகேஷ்: ஹிட்லருடன் நூடுல்ஸ், காந்தியுடன் காஃபி சாப்பிட்டவர் என அளந்து விடும் சீமான்..!

திருவள்ளுவர் திருக்குறள் எழுதும் போது ஓலைச்சுவடி கிழித்து கொடுத்தவர். ஹிட்லருடன் நூடுல்ஸ் சாப்பிட்டவர். காந்தியடிகளுடன் காஃபி சாப்பிட்டவர். சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பீரங்கி படையில் பயிற்சி பெற்றவர் இப்படி பல அனுபவங்களைக் கொண்டுள்ள சீமானை விமர்சிக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகர் மாவட்ட திமுக மற்றும் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், மாவட்ட துணை செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் நானும் ஒரு அரசியல் தலைவர் என சொல்லிக் கொண்டு ஒருவர் திரிகிறார். திருவள்ளுவர் திருக்குறள் எழுதும்போது அவருக்கு நான்தான் ஓலைச்சுவடி கிழித்து கொடுத்தேன், ஹிட்லருடன் சேர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்டேன், காந்தியடிகளுடன் சேர்ந்து காஃபி சாப்பிட்டேன், சுபாஷ் சந்திரபோஸ் பீரங்கி படையில் பயிற்சி அளித்தேன் என அளந்துகொண்டே போவார்.

அவரது பெயரை இங்கே குறிப்பிட்டு, எனது மரியாதையை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. மத்திய பாஜக அரசு நம் மீது இந்தியை திணித்து, தமிழ் மொழியின் தொன்மையையும் நமது பண்பாட்டையும் அழிக்க பார்க்கிறது. அவர்களுக்கு அடிபணிந்து நாம் இந்தி படித்தால், நாம் யார் என்பதை மறந்துவிடுவோம். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் இரும்பை பயன்படுத்தி உள்ளான் என சமீபத்திய ஆய்வறிக்கை ஆதாரத்துடன் குறிப்பிடுகிறது.

அப்படியானால், நமது பழமையும், தொன்மையும் என்னவென்று உலகிற்கு தெரியும். திருக்குறளை இன்று ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு, மொழி பெயர்த்துக்கொண்டு இருக்கின்றன. இப்படி தமிழ்மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல உறுதுணையாக இருக்கிறார் நமது முதலமைச்சர். தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்துக்கு ‘சர்வ சிக்‌ஷா அபியான்’ என மத்திய அரசு இந்தியில் பெயர் சூட்டியுள்ளது.

மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாம் ஏற்றால்தான் மத்திய அரசிடமிருந்து நமக்கு வரவேண்டிய ரூ. 2,151 கோடி நிதியை தருவோம் என்கிறார்கள். நம் கொள்கையை அடகுவைத்து, அப்படி ஒரு நிதியை பெறவேண்டாம் என நமது முதலமைச்சர் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல், மத்திய அரசுக்கு பாடம் புகட்டியுள்ளார். வேறு எந்த முதலமைச்சருக்கு இப்படி ஒரு தைரியம் வரும்? எடப்பாடி பழனிசாமிக்கு வருமா? நிதி பகிர்வு மூலம், நியாயமாக நமக்கு வரவேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள்.

நமது மாநிலத்தில் உள்ள 40 லட்சம் மாணவர்களின் கல்வியோடு, மத்திய அரசு விளையாடுகிறது. இது, பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்ந்த மண். இந்த மண்ணில், வேறு யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது. 7 -ஆவது முறையும் திமுகதான் ஆட்சி பொறுப்பில் அமரும். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு என அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

அஜித்குமார் புகார்: சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட போலியான Photo-வை வைத்து, ஏமாற்றி பல கோடி ரூபாய் திரள் நிதி பெற்றுப் பிழைப்பு நடத்தி வருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் அஜித்குமார் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் அஜித்குமார் காவல்துறை இயக்குநர் மற்றும் மதுரை மாநகர் காவல் ஆணையர், ஆகியோருக்கு ஆன்லைன் மற்றும் பதிவு தபால் மூலம் அனுப்பியுள்ள புகார் மனுவில், இன்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை கிளம்பி இருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழ் இனத்தின் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டது என சினிமா இயக்குனர் திரு. சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக திரு. பிரபாகரன் அவர்களின் பெயரை கூறி கட்சி நடத்தி வரும் சீமான், பல இலட்சம் இளைஞர்களின் தமிழ் உணர்வை தூண்டி தவறான பாதையில் அழைத்துச் சென்றுகொண்டு இருக்கிறார். பிரபாகரன் அவர்களின் நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளார். ஆக பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு கோடி கணக்கான தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த புகைப்பட மோசடி மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பல கோடிகளை திரள் நிதி மூலம் திரட்டி அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார். ஆகவே சமூகம் அவர்கள் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடி ரூபாய் திரளநிதி பெற்று பிழைப்பு நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சைமன் என்கின்ற சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தும் அந்த போலியான புகைப்படத்தை உருவாக்கி கொடுத்த இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் செங்கோட்டையன் என்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வழக்கறிஞர் அஜித்குமார் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

வருண் குமார் மீது சீறும் சீமான்: 36 லட்சம் ஓட்டு வாங்குகிற நாம் தமிழர் கட்சி, பிரிவினைவாத இயக்கமா..!?

சண்டிகரில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொடங்கி வைத்த 5-வது ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொள்ள வருண்குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

வருண்குமார் பேசுகையில் , “எனது குடும்பம் இணையதள மிரட்டல் , சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் இயக்கம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சியால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். எனது குடும்ப புகைப்படத்தை நாம் தமிழர் கட்சியினர் இணையத்தில் பதிவிட்டிருந்தனர்.

இது குறித்து 2 எப்ஐ ஆர் பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை . அது போல் இணையதளத்தில் அவர்கள் போட்ட பதிவுகளை நீக்க கோரியும் அவை நீக்கப்படவில்லை”. என வருண் குமார் பேசியிருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூரில் செய்தியாளர்கலின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறோம். தேர்தலில் நின்று 36 லட்சம் வாக்குகளை பெற்று, மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. வருண்குமார் ஐபிஎஸ் எதனை வைத்து நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார்? அடிப்படை தகுதி இல்லாமல் எப்படி ஐபிஎஸ் ஆனார்? தமிழ், தமிழர் என்பது எப்படி பிரிவினைவாதம் ஆகும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வானதி சீனிவாசன்: சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது…!

“சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர்களே கொடுத்துக் கொள்ள கூடாது என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில தினங்களுக்கு முன்புசந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் கூட்டத்தில் பேசிய சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள்.

ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம், ரஜினிகாந்த் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அரசியலில் நான் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சேர்ந்ததால் பயந்துவிட்டார்கள்” என பேசியிருந்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், சிவானந்தா காலனி டாடா பாத் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தன்னை அரசியல் சூப்பர் ஸ்டார் என பேசிய சீமானின் கருத்துக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வானதி சீனிவாசன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்கள் தான் கொடுக்க வேண்டும்.

அரசியலில் சூப்பர் ஸ்டார் என்றால், மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தான். அவருக்கு உலக நாடுகள் எல்லாம் மிகச்சிறந்த தலைவர் என பட்டமளித்துக் கொண்டிருக்கிறது. காவி என்பது பாஜகவுக்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது இந்த நாட்டின் பாரம்பரியம். அதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சீமான்: அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்கு முறைவாசல் செய்யும் பாஜக..!

மக்களின் வாக்குகளின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்கு முறைவாசல் செய்திடும் பாஜகவின் ஆட்சியதிகாரம் நாட்டைப் பிடித்த பெருங்கேடு!
என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் தனது எக்ஸ் பக்கத்தில்,  பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான கெளதம் அதானி ஒன்றிய அரசின் நிறுவனத்திடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று, அதற்காக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்கு ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய்க்கும் மேலாக இலஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியது அம்பலமாகி, அந்நாட்டு அரசு அதானி உள்ளிட்டோரைக் கைதுசெய்ய உத்தரவிட்டிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கும் பேரவமானமாகும்.

‘மோடியின் பினாமி’ என வர்ணிக்கிற அளவுக்கு கெளதம் அதானிக்கு நிழல்போல எல்லாவுமாக இருக்கிற பிரதமர் நரேந்திரமோடி, நாட்டையே உலுக்கியிருக்கும் இம்மாபெரும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து இப்போதுவரை வாய்திறக்காதிருப்பதேன்? நாட்டின் பெயரையும், புகழையும் சீர்குலைக்கும் வகையில் முறைகேடுசெய்து அமெரிக்க அரசால் கைதுப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அதானியின் மீதும், அவரது குழுமத்தின் மீதும் இன்னும் நடவடிக்கை எடுக்காதிருப்பது எதற்காக? இன்னும் அவரைக் காப்பாற்றவும், கரைசேர்க்கவும்தான் முயற்சிக்கிறதா பாஜக அரசு? இழிநிலை! மக்களின் வாக்குகளின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்கு முறைவாசல் செய்திடும் பாஜகவின் ஆட்சியதிகாரம் நாட்டைப் பிடித்த பெருங்கேடு!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மின்சார வாரியங்களுக்கு அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 2019 – 20 -ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமானது (SECI) அதானியின் நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒப்பந்தமிட்டிருக்கிறது. அதன்படி, அதானி நிறுவனம் 8 ஜிகா வாட் மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துக்கு வழங்கும். விலை அதிகமாக இருந்ததால் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து மின்விநியோக நிறுவனங்கள் மின்சாரத்தை வாங்குவதில் சிக்கல் நிலவியது.

இந்நிலையில், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யச் சொல்லி ஆந்திரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்குக்கு 2020-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 2,000 கோடி ரூபாய்வரை இலஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறதெனக் கூறி, அதானி குழுமத்தின் மாபெரும் முறைகேட்டை ஆதாரங்களோடு வெளிப்படுத்தியிருக்கிறது அமெரிக்க அரசு.

இந்த வழக்கு அமெரிக்க நாட்டின் நியூயார்க் கிழக்கு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் தொடுக்கப்பட்டு, கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 2,000 கோடி ரூபாயை இந்தியாவின் பல்வேறு மாநில மின்சார வாரியங்களுக்கு இலஞ்சமாகக் கொடுத்து பெறப்பட்ட ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் முதலீடுகளைப் பெற முயன்றபோது ஒட்டுமொத்தமாகச் சிக்கியிருக்கிறது அதானி குழுமம்.

டிசம்பர் 1, 2021 அன்று இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் 7 ஜிகா வாட் மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது ஆந்திர அரசு. இதற்காக, 1,750 கோடி ரூபாய் அம்மாநில அரசுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசின் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல, செப்டம்பர் 21, 2021 அன்று 1000 மெகாவாட் மின்சாரத்தைப் பெற இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் தமிழக மின்சார வாரியம் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இதற்குப் பின்புலத்தில் அதானி குழுமம் தமிழக மின்சார வாரியத்துக்குக் கோடிகளைக் கொட்டியிறைத்திருக்கிறது என்பது அமெரிக்க அரசின் குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

2012- 2016-ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில், முந்தைய அதிமுக ஆட்சியின்போது தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசிய நிறுவனத்திடமிருந்து வாங்கி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (TANGEDCO) அதானி குழுமம் மும்மடங்கு அதிக விலைக்கு விற்று, முறைகேடு செய்து 6,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது குறித்து அறப்போர் இயக்கம் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அதற்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை; இச்சமயத்தில், திமுகவின் ஆட்சி நிர்வாகத்துக்கு அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்து, இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து (SECI) அதிக விலைக்கு மின்சாரம் வாங்கச் செய்திருக்கும் செய்தி வெளியாகியிருப்பது திராவிடக்கட்சிகளின் கேடுகெட்ட ஆட்சி நிர்வாகத்துக்கான சமகாலச் சாட்சிகளாகும்.

திராவிட மாடல் ஆட்சியின் இலட்சணம் அமெரிக்காவரை சென்று தமிழ்நாட்டின் மானம் சந்தி சிரித்து நிற்கிறது. இருந்தும், இதுவரை தமிழ்நாட்டின் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வாய்திறக்காது கள்ளமௌனம் சாதிக்கிறார். எல்லாவற்றுக்கும் அறிக்கைப்போர் தொடுத்து, லாவணிக்கச்சேரி நடத்துகிற திமுக, இவ்விவகாரத்தில் அடக்கி வாசிப்பது ஏன்? என்பது புரியவில்லை. அதானி குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் இடவில்லை என்பதோடு நிறுத்திக் கொண்டுவிட்டாரே மின்சாரத்துறை அமைச்சர் தம்பி செந்தில்பாலாஜி, அதானி குழுமத்தோடு திமுக அரசு ஒப்பந்தம் இட்டதாக யாரும் குற்றஞ்சாட்டவில்லையே! அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்துதான், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து தமிழக மின்சார வாரியம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தமிட்டது என்பதுதானே குற்றச்சாட்டு.

அதுகுறித்து திமுக அரசின் நிலைப்பாடென்ன? என்ன சொல்லப்போகிறார் தம்பி செந்தில் பாலாஜி? அதானி தமிழக மின்சார வாரியத்துக்கு இலஞ்சம் கொடுக்கவில்லை; அப்பழுக்கற்ற அதானி மீது அமெரிக்க அரசு அநியாயமாகக் குற்றஞ்சுமத்துகிறதென்றா? யார் இலஞ்சம் வாங்கியது? அதிகாரிகளா? அமைச்சரா? இல்லை! முதல்வரா? அதிகாரிகள்தானென்றால், அமைச்சருக்குத் தெரியாது அதிகாரிகளுக்கு அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்துவிட முடியுமா? அரசுப்போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்த அடித்தட்டு மக்களிடமே இலஞ்சம் வாங்கிக் கைகளையும், பைகளையும் நிரப்பிய வித்தகரான தம்பி செந்தில்பாலாஜி, அதானி குழுமத்தையா விட்டுவைப்பார்? ஐயா கருணாநிதி கூறிய, தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா எனும் முதுமொழி நினைவுக்கு வருகிறதில்லையா?

ஏற்கனவே, 1.6 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேலான கடனில் தமிழக மின்சார வாரியம் சிக்கித் தவிக்கும் சூழலில், அச்சுமையை மக்களின் தலையில் மின்கட்டண உயர்வாக ஏற்றி வரும் திமுக அரசு, இனியென்ன செய்யப் போகிறது? அதானி குழுமத்திடம் பல கோடிகளை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி ஏழைகளின் வயிற்றிலடிப்பதுதான் சமூக நீதி அரசா? அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதியில் செய்திட்ட 6,000 கோடி ரூபாய் ஊழல் மீது இன்றுவரை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மறுப்பதுதான் திராவிட மாடலா?

கடந்த சூலை 10 அன்று தமிழ்நாட்டுக்கு வந்த கெளதம் அதானி, முதல்வர் ஸ்டாலினை ரகசியமாகச் சந்தித்துச் செல்ல வேண்டிய அவசியமென்ன? சந்திப்பையே வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்னப் பேசி முடிக்கப்பட்டது? முதல்வர் ஸ்டாலின் கெளதம் அதானியைச் சந்திப்பதும், கெளதம் அதானியின் மகன் கரன் அதானி துணை முதல்வரான தம்பி உதயநிதியின் பதவியேற்புக்கு வாழ்த்துச் சொல்வதும் எதன் வெளிப்பாடு? திமுக அரசுக்கும், கெளதம் அதானிக்கும் இடையே என்ன ரகசிய உறவு? அதானி குழுமத்தின் நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து திமுகவின் ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கிறது திமுக அரசு. இத்தோடு, மோசடிப் பின்புலம் கொண்ட அதானி குழுமத்தை 42,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர் மாநாட்டின் வாயிலாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. அதானி மீது பாசத்தைப் பொழிவதிலும், அவரைக் காப்பாற்றுவதிலும் பாஜகவோடு திமுக ஏன் போட்டிபோடுகிறது? இதுதான் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கான ஆட்சியா? இதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கான அதிகாரமா? வெட்கக்கேடு! பேரவலம்!

ஆகவே, நாட்டின் மானத்தைக் கப்பலேற்றிய கெளதம் அதானி மீதும், அவரது குழுமத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து, அவரைக் கைதுசெய்யவும், அவரது குழுமத்துடான அரசின் ஒப்பந்தங்களை ரத்து செய்து, அக்குழுமத்தினை மொத்தமாகக் கறுப்புப்பட்டியலில் வைக்கவுமான செயல்பாடுகளை மேற்கொள்ள மறுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டுக்கே செய்திடும் பச்சைத்துரோகமாகும்.

இத்தோடு, பாஜக அரசை எதிர்ப்பதாக வெளிவேடமிட்டுக் கொண்டே, அவர்களோடு கொல்லைப்புற வழியாக உறவாடி, அதானிக்கு வாசல்திறந்துவிடும் திமுக அரசின் நயவஞ்சகப்போக்கு தமிழர்களது நலனை அடகு வைத்திடும் கங்காணித்தனத்தின் உச்சம். மக்களாட்சிக்கு எதிரான இச்செயல்பாடுகளுக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான்: திமுகவினரிடம் ரெய்டும் ஏன் வரவில்லை..! வராது கப்பம் சரியாக கட்டரங்க..!

ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

த.வெ.க – அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நாங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான். அவர் அவரோட போறாரு. இவர் இவரோடு போறாரு என இந்த காரை அவர் வைத்திருந்தார். இப்ப யார் வைத்திருக்கிறார் என்ற நகைச்சுவை எல்லாம் நான் சொல்ல தயாராக இல்லை.

மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம் என சீமான் தெரிவித்தார்.

சீமான்: திமுகவிற்கும் பாஜகவிற்கும் கள்ள உறவில் இல்லை..! நேரடி கூட்டணி இருக்கிறது..!

திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களையோ அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி, தமிழக முதலமைச்சரையும் விளையாட்டுத் துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்.

காலையில் அப்பாவை சந்தித்தால் மாலையில் மகனை சந்திக்கிறார். ஏதோ சம்மந்தி போல போய் சந்தித்து கொள்கிறார்களே அது நேரடியா, மறைமுக கூட்டணி என்றார். திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள் என சீமான் தெரிவித்தார்.

விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்..!

தஞ்சை ஒரத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் விஜய் ரசிகர்கள் நாம் தமிழரில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

சீமான்: கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்..!

கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, “கூட்டணி என்பது எனக்கு சரிப்பட்டு வராது. நான் பெரிய கனவு கொண்டுள்ளேன். ஒரு நேர்மையற்றவன் நாட்டு மக்களையும் நேர்மையற்றவன் ஆக்குகிறான். ஒரு தலைவன் தான்தான் இதை செய்வேன் என இருக்க கூடாது. எனக்கு பின்னால் வரும் தலைமுறை இதை செய்யும் என்ற நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும். எங்கள் காலத்தில் வென்றால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் இன்னொரு தலைமுறைக்கு கையளித்து செல்வோம்.

நல்லாட்சி நடத்துவதற்கு எதற்கு விளம்பரம் தேவை. தாய்மார்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்?. படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்?. நல்ல ஆட்சி கொடுப்பதாக நாடும், மக்களும் சொல்லவில்லை. ஆட்சியில் இருக்கும் அவர்கள்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றனர். இங்கு சேவை அரசியலோ, செயல் அரசியலோ இல்லை. வெறும் செய்தி அரசியல், விளம்பர அரசியல் மட்டும்தான் உள்ளது.

நல்ல ஆட்சி கொடுத்தால் மக்கள் அந்த தலைவனை சந்திக்க ஓடி வர வேண்டும். ஆனால் 200 ரூபாய் கொடுத்து மக்களை திரட்டி வரவேற்பு கொடுக்கிறார்கள். நல்லாட்சி கொடுப்பவர் ஏன் ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது? மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதாக சொன்னார்கள். எத்தனை முறை திமுக ஆட்சியில் இருந்துள்ளது. ஏன் மழைநீர் வடிகால் வசதிக்கு நிரந்தர திட்டம் செயல்படுத்தப்படவில்லை?. 4 ஆயிரம் கோடி செலவழித்த பின்னர் ஏன் 1,500 படகுகள், ஆயிரக்கணக்கான நீர் இறைப்பு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன?.

காமராஜரே தான் நல்லாட்சி கொடுத்ததாக சொல்லவில்லை. நல்லாட்சி கொடுப்பவன் அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது மக்களுக்கே தெரியும். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். அதிகாரத்துக்கு தனித்து நின்று வர முடியாது என்று யார் சொன்னது?. என்னால் ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியாவிட்டாலும் என்னை தொடர்ந்து வரும் என் தம்பி, தங்கைகள் ஆட்சி அமைப்பார்கள்.

கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். என் கால்களை நம்பித்தான் என் பயணம் இருக்கும். அடுத்தவன் கால்களை நம்பி என் பயணத்தை தொடர முடியாது. எனவே கூட்டணி எனக்கு சரியாக வராது. கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை. விஜய் தற்போது கட்சி ஆரம்பித்து தனது கொள்கைகளை அறிவித்துள்ளார் . ஆனால் அவரின் கொள்கைகளுக்கும் எங்களது கொள்கைகளுக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது முதலில் அவர் தனது கொள்கைகளை திருத்திக் கொள்ளட்டும் என சீமான் தெரிவித்தார்.