நித்தியானந்தா: “மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன்..!

“மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன் என நித்தியானந்தா வீடியோ வெளியிட்டார். சாமியார் நித்தியானந்தா “கதவைத்திற காற்று வரட்டும்” என்ற ஆன்மிக கட்டுரை எழுதியதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக, ஆபாச வீடியோ முதல் மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதியாக மடாதிபதியாக அறிவித்துக்கொண்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் நித்தியானந்தா சிக்கி தலைமறைவு வாழ்க்கை சாமியார் நித்தியானந்தா வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் காவல்துறை தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தென் பசிபிக் கடலில் உள்ள தீவு ஒன்றுக்கு கைலாசா என்று பெயர் வைத்துக்கொண்டு அங்கேயே தங்கி அங்கிருந்தே சொற்பொழிவு ஆற்றிவந்த நித்தியானந்தா, நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாக 2022-ஆம் ஆண்டு பரபரப்பாக தகவல் பரவியது.

அதற்கு பதில் அளித்த நித்தியானந்தா, 27 மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவ சிகிச்சையில் இருந்து தான் இன்னும் வெளியே வரவில்லை என்றும், பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் பரபரப்பு கருத்தை வெளியிட்டது மட்டுமின்றி, தான் சாகவில்லை என்றும், சமாதி மனநிலையை அடைந்தது இருப்பதாகவும், விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக வீடியோ எதிலும் நித்தியானந்தா தோன்றவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் காணொலி காட்சி மூலம் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிக்கொண்டு இருந்தபோது, இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அப்போது அவர், “இந்து தர்மத்தை காப்பதற்காக சாமி உயிர் தியாகம் செய்துவிட்டார்” என்று தெரிவித்தார். இதனால், நித்தியானந்தாவின் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், உண்மையில் நித்தியானந்தா இறந்துவிட்டாரா? அல்லது காவல்துறை வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான நித்தியானந்தாவின் புதிய யுக்தி இதுவா? என்பதை ஆமதாபாத் காவல்துறை விசாரித்து வந்தது. சாமியார் நித்தியானந்தா தம்மை பற்றி வெளியான தகவல்களை மறுத்து தாம் நலமுடன் இருப்பதாக நேற்று இரவு முதலே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சாமியார் நித்தியானந்தா வெளியிட்ட வீடியோவில், தம்மை பற்றிய சமூக வலைதள கருத்துகளால் தாம் உயிரோடு இருக்கேனா இல்லையா என்பது தமக்கே சந்தேகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

“நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். அதில், இன்னமும் ஆகக் குறைந்தபட்சம் 150 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன்; இந்து எதிரிகள், இந்து வெறுப்பாளர்கள் என்னுடைய நேரத்தை வீணடிக்கின்றனர். நான் வன்முறையை விரும்பாதவன்; என் மீது அவதூறு பரப்புபவர்களை தாக்கப் போவதும் இல்லை. “மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். வீணாப் போனவனுங்களா..ஏகப்பட்ட டைம் வேஸ்ட் பண்ணிட்டானுங்க..இதுக்கு மேல தொடர்ந்து செய்தீர்கள் என்றால் என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன்டா.. வேணாம். வம்பு பண்ணாதீங்க.. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என நித்தியானந்தா அதில் பேசியுள்ளார்.

நிறைய பேர் நான் செத்துப் போய்ட்டேன்னு வீடியோ போட்டிருக்காங்க போல… ஹஹஹாஹா.. 3 மாதங்களில் 4,000 வீடியோக்கள் போட்டிருக்காங்க.. 4,000 கிளிப்ஸையும் எப்ப பார்த்து முடிக்கிறது? சிலபஸ் கவர் பண்ணி முடிக்காத எக்ஸாமுக்கு போற ஸ்டூடன்ட்ஸ் மாதிரி நான் வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன்.. எனக்கும் சந்தேகமாக இருக்கு.. நான் உயிரோடு இருக்கேனா இல்லையான்னு…எல்லா சோசியல் மீடியா, மெயின் ஸ்ட்ரீம் மீடியா, யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் ஒன்றாக சேர்ந்து,பஞ்சாயத்து கூடி ஏதோ ஒரு வீடியோவைப் போட்டு, நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா? ஏதா ஒரு முடிவுக்கு வாங்கப்பா எப்படியோ எனக்கு வந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்க என நித்தியானந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகாரி வீட்டு வேலைகளுக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்..! பணம் கேட்டு மிரட்டல்..!

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயதான தாயை பராமரிக்க ஆள் தேவைப் பட்டுள்ளது. “தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வி என்கிற சூசையம்மாள் என்பவர், வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பி வைப்பது போன்ற பணிகளை செய்யும் “சன் லைட் ஹோம் கேர்”என்ற ‌ நிறுவனத்தில் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மூகண்டஹள்ளி பகுதியை சேர்ந்த நளினி என்ற பெண்ணை மாதேஸ்வரன் வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். மாதேஸ்வரன் வீட்டிலேயே நளினி தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நளினிக்கும், மாதேஸ்வரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த நளினி, மகேந்திரனுடன் தனிமையில் இருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோவை “சன் லைட் ஹோம் கேர்” நிறுவனத்தின் உரிமையாளர் செல்விக்கு நளினி அனுப்பி உள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை மகேந்திரனுக்கு அனுப்பிய செல்வி, இந்த வீடியோ வெளியே வராமல் இருக்க வேண்டும் எனில் 5 லட்சம் ரூபாய் கேட்டு செல்வி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாதேஸ்வரன் 2 லட்சத்து 30ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக தெரிகிறது.பின்னர் மீதி பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் இதனால் செல்வி தொலைபேசியில் அழைத்தால் அதனை மாதேஸ்வரன் தவிர்த்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி அதன் வீடியோவை தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆம்பூர் பகுதி விமல் ராஜிக்கு அனுப்பி அவரிடம் பணம் கேட்கும்படி கூறியதன் காரணமாக விமல் ராஜ் மகேந்திரனுடைய வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளார். இதனால் பயந்துபோன மாதேஸ்வரன் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நளினி, செல்வி மற்றும் விமல்ராஜ் 3 பேரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் 2 பெண்கள் உட்பட3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜயலட்சுமி கண்ணீர் வீடியோ: நான் பாலியல் தொழிலாளியா சீமான்.. எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது..!

நான் பாலியல் தொழிலாளியா, எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது. சீமான் இனி நன்றாகவே இருக்க மாட்டார். இனி நிம்மதியாகவும் இருக்க முடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்ய போகிறது என பார் என விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த வழக்கு தற்போது சூடுபிடித்து உள்ளது. இதுதொடர்பாக சீமான் வீட்டில் நடைபெற்ற சண்டை, விஜயலட்சுமியின் அடுத்தடுத்த வீடியோக்கள் என விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சீமான் புறப்பட்டுச் சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், சீமான் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவரது கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என கனிமொழி கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “என்னை பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு நீங்கள் யார், நீங்கள் என்ன நீதிபதியா, என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

அவர்தான் பெண், அவருக்கு மட்டும்தான் மனமிருக்கிறதா, அவருக்கு மட்டும்தான் காயம்படுமா? என் வீட்டில் பெண்கள் இல்லையா, என் தாய், என் சகோதரிகள் எல்லாம் இல்லையா, என்னை நேசிக்கும் மனைவி இல்லையா? அவருக்கெல்லாம் காயம்படாதா? நான் கேட்டதில் உங்களுக்கு கண்ணியம் குறைந்துவிட்டது என்றால் நீங்கள் செய்யும் செயலுக்கு என்ன பெயர், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ந்து அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள்.

Enjoyment without responsibility என்று உங்களது தலைவர் பெரியார்தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில்தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறு, இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட விஜயலட்சுமி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,” நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான். என்னை பாலியல் தொழிலாளி என்று எப்படி சொல்லலாம். நான் பாலியல் தொழிலாளி என்றால், எதற்காக பெங்களூருவில் என்னுடைய சகோதரியுடன் கஷ்டப்பட போகிறேன்?. இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம். ஆனால் இனி நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது. என்ன செய்ய போகுது பார்” என விஜயலட்சுமி வேதனையில் கண்ணீர் விட்டபடி வீடியோவில் பேசி இருந்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீமானை சரமாரியாக கேள்வி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி

மீடியா முன்னாடி சீன் போட்டுட்டு இருக்காத.. கேவலம் பிடிச்ச பொம்பளயாம்.. உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு.. எனக்கு தான் கேவலம்.. பெரிய ஆள் மாதிரி பேசாத” என சீமானை காட்டமாக விமர்சித்து விஜயலட்சுமி புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்க கூடிய சீமான், தன்னை ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 -ஆம் ஆண்டு வளசரவக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே, அந்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.

எனினும், சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யாமல் காவல்துறை வைத்து இருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமானின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், சீமான் மீதான வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதையடுத்து, இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்க வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், என்ன பாலியல் குற்ற வழக்கு.. நிரூபிக்கப்பட்டு இருக்கா.. சேட்டை பண்னக்கூடாது.. திருமணம் என்ற ஒப்பந்தத்திற்குள்ளே போகல.. 6,7 மாதங்கள் தான் பழகியிருப்போம்.. அதன்பிறகு, 2008, 2009, 2010 கால கட்டங்களில் நான் தொடர்ச்சியாக சிறையில் தான் இருந்தேன். 2009 -க்கு பிறகு தொடர்பு இல்லை” என்று காட்டமாக பேசினர். சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், என்னதான் அவளோட பிரச்சினை என்று பிரஸ்காரங்க கேள்வி கேக்கனுமாம்.. சீமான், 2023 ல் எதுக்கு நீ 50 ஆயிரம் போட்ட.. நீ என்னமோ பிள்ளைங்க வளர்ந்துடுச்சு.. அது வளர்ந்துடுச்சு.. இது வளர்ந்துடுச்சு.. அப்புறம் எதுக்குடா என்கிட்ட வீடியோஸ் வாங்கனீங்க.. எதுக்கு வீடியோஸ் வாங்குனீங்க.. நீ வாங்கி வைப்ப.. அப்புறம் நான் வாயை மூடிட்டு இருப்பேன். அப்புறம் உங்க ஆட்களே வந்து டெலிகாஸ்ட் பண்ணுவேன் என மிரட்டுவாங்க..

இதுக்குள்ளயே நான் வந்து சாகணுமா? நீ ஆம்பளயா இருந்தா அநாகரீகமாக பேசாத சீமான்.. 2008 ல இருந்து வெறும் 6 மாதம் தான் பழகினேனாம். அப்புறம் எதுக்குடா நான் 2011 ல் வந்து புகார் கொடுப்பேன். 2011-ல் நீங்க கொடுத்த டார்ச்சருக்குதான் நான் போட்ட துணியோட வந்து கமிஷனர் ஆபிசில் புகார் கொடுத்தேன். அசிங்கமாக பேசும் வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே.. நீ பேசினால் உன்னை விட கேவலமாக பேசுறதுக்கு எனக்கு தெரியும். சும்மா டிராமா போடாத.. நேற்று வரைக்கு என்ன சொல்லிட்டு இருந்த..

நடிகை யாருன்னே தெரியாது… திமுக கூட்டிட்டு வந்தாங்கன்னுதான சொல்லிட்டு இருந்த.. நேற்று தான சொல்லுற.. ஆமா நான் 50 ஆயிரம் கொடுத்துட்டு இருந்தேன்னு.. எதுக்கு மதுரை செல்வம் என் கிட்ட வீடியோ வாங்கிட்டு இருந்தான். எதுக்கு 50 ஆயிரம் என் அக்கவுண்டில் போட்டீங்க.. மீடியா முன்னாடி சீன் போட்டுட்டு இருக்காத.. கேவலம் பிடிச்ச பொம்பளயாம்.. உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு.. எனக்கு தான் கேவலம்.. பெரிய ஆள் மாதிரி பேசாத” என விஜயலட்சுமி தெரிவித்தார்.

மதுபோதையில் பொதுமக்களை துரத்தி துரத்தி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கடை ஒன்றுக்குள் புகுந்து மற்றும் வாகனங்கள் மீது வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு சிறு குறு பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பனியன் நிறுவனங்கள், விவசாய தோட்டங்கள், பண்ணைகளில் வடமாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் பலரும் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இங்கு பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் சிக்கன் கடை ஒன்றிற்குள் புகுந்து பொதுமக்களையும், வாகனங்களையும் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் பேருந்து நிறுத்தம் பகுதியின் அருகில் உள்ள மதுபானக் கடையில் தகராறு ஏற்பட்டதால், கையில் கட்டைகளுடன் துரத்தி துரத்தி பொதுமக்கள் மீதும், வாகனங்கள் மீது ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக இளைஞரணியினர் “கெட் அவுட் மோடி..” என முழக்கமிட்ட ட்ரெண்டாகும் வீடியோ..!

பிரதமர் தமிழகம் வந்தால் அவரை ‘கெட் அவுட் மோடி’ சொல்லி விரட்டுவோம் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விட்ட நிலையில், திமுக இளைஞரணியினர் ‘கெட் அவுட் மோடி’ கூறி வீடியோவை வெளியிட்டடு இருக்கின்றனர். மும்மொழிக் கொள்கையை முன்வைக்கும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதியை விடுவிப்போம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாகு கூறியிருந்தார். இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதில் பங்கேற்றிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்றபோது, கடந்த முறை தமிழக மக்கள் Go Back Modi என்று சொல்லி துரத்தி அடித்தார்கள். மீண்டும் இதே போல தமிழ்நாட்டு மக்களிடம் முயன்றால், Go Back Modi என்று சொல்வதற்கு பதிலாக, ‘Get Out Modi’ என்று கூறி துரத்துவார்கள்” என்று கூறியிருந்தார்.

இவரது பேச்சு பாஜக மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. இது குறித்து பேசிய அண்ணாமலை, “உலக நாடுகள் சிவப்பு கம்பளம் விரித்து அந்த மனிதனை வரவேற்பதற்காக கைகட்டி காத்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அவரை விமர்சிக்கிறார்கள். உங்களால் முடிந்தால் Get Out Modi என சொல்லி பாருங்கள்” என்று சவால் விட்டிருந்தார். மட்டுமல்லாது துணை முதல்வரின் வீட்டை முற்றுகையிடுவதாகவும் பாஜகவினர் கூறியிருந்தனர்.

இது இருவருக்கும் இடையேயான வார்த்தைப்போராக வெடித்தது. இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த உதயநிதி, “வீட்டைதானே முற்றுகையிடப் போகிறார்கள்? வரச்சொல்லுங்கள். நான் வீட்டில்தான் இருப்பேன். மாலை ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. முடித்துவிட்டு வரப்போகிறேன்” என்று கூலாக பதிலளித்துள்ளார். பதிலுக்கு அண்ணாமலை, “நாளை காலை நான் Get Out Stalin என ட்வீட் பதிவிட போகிறேன். அது எவ்வளவு போகப்போகிறது என்று நீங்களே பாருங்கள்” என கூறியுள்ளார். இரு இளம் தலைவர்களின் கருத்து மோதல் தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் கடுமையாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO-TN) மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இளைஞர்களும், மாணவர்களும் ‘Get Out Modi’ என்று முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு ஓட விட்ட செங்கோட்டையன்..!

இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய பகுதியில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்ட மேடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவரின் புகைப்படங்களும் பெரிதாக ஒரே அளவில் இடம் பெற்றிருந்தன. இந்த விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில் யார் எந்த ஊரில் உள்ளார்கள் என எனக்கு தெரியும். எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது.

எதிர்கட்சித் தலைவரின் கட்டளையில் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகளில் அரசியல் உள்ளேன், எண்ணற்ற தலைவர்களை பார்த்துள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் நான் சென்று கொண்டுள்ளேன். செய்தியாளர்கள் என்னிடம் எதவாது கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். காலையில் சொன்னதை இப்போதும் சொல்கிறேன், நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் சொல்ல மாட்டேன்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லை. அவர்கள் புகைப்படம் இல்லாததால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, நான் புறக்கணிக்கவில்லை. அதைப்பற்றி தற்போது நிறைய பேர் பேசி வருகின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன். என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள். நான் தெளிவாக இருக்கிறேன்.

காவல்துறை பாதுகாப்பு அவர்கள் போட்டு இருக்கின்றனர். பாதுகாப்பு கண்காணிப்பு என்பது காவல் துறை போட்டது. நான் போட சொல்லவில்லை. கோட்டைக்கு வர வேண்டும் என்றால் செங்கோட்டையனை சுற்றி வருகின்றார்கள். 43 ஆண்டு ஆட்சியில் நான் யாரையும் தவறாக பேசியதில்லை. கோபப்பட்டது இல்லை. ஜெயலலிதாவின் பணிகளை கண்கூடாகப் பார்த்தவன் நான். ஜெயலலிதா விரலை நீட்டும் போதே, அவர் கை அசைக்கும்போதே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். ஏன் கழற்றி விட்டார் எனக் கேட்பார்கள். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது, அதையெல்லாம் சொன்னால் தவறாகப் போய்விடும்.

ஏன் செங்கோட்டையனுக்கு கட்சியில் 2 பெரிய பொறுப்புகளை தந்தேன் என ஜெயலலிதா சொன்னது இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது. “எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா கூறினார். தொடர்ந்து, தன்னைப் பற்றி ஜெயலலிதா பேசும் ஆடியோ ஒன்றையும் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். “இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்.” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டுக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், “தன்னலம் கருதாமல் செயல்படக்கூடியவன் நான், இயக்கம் ஒன்றே பெரிதென நினைப்பவன். நான் என்றைக்கும் என்னை தலைவன் என்று சொன்னதில்லை. என்றைக்கும் தொண்டன் என்றுதான் சொல்லி இருக்கிறேன். அதில் இருந்து நீங்கள் என்னை புரிந்துகொள்ளலாம். மீண்டும் தமிழகத்தில் தொண்டர்களோடு தொண்டராக இருந்து பணியாற்றுவேன்” என செங்கோட்டையன் பேசினார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி அறைஞ்சிடுவேன் “வெளியே போ..” என ஆவேசம்..!

வங்கி பெண் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர்களை அறைஞ்சிடுவேன் “வெளியே போ..” என்று பேசும் வீடியோ சமூக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு மகளிர் சுய உதவி குழுவினர் சிலர் கடன் வாங்குவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, வங்கிக் கிளையில் பணியில் இருந்த பெண் அதிகாரி, பொதுமக்களை எழுந்து வெளியே போகச் சொல்லி தரக்குறைவாக பேசினாராம்.

அவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அந்த பெண் அதிகாரி, அங்கிருந்தவர்களை பார்த்து, நீங்கள் எல்லாம் மிருகங்களா.. எதுக்கு சிரிக்குற.. அறைஞ்சுடுவேன்.. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.. எழுந்திருச்சு எல்லாரும் வெளியே போ.. எல்லாரும் வெளியே போனால் தான் கிடைக்கும். இல்லாவிட்டால் கிடையாது.. வெளியே போங்க எல்லாரும்.. இங்கு கத்திக்கொண்டிருப்பர்கள் எல்லாரும் பைத்தியமா ” என பேசும் வீடியோ சமூக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் வாகனத்தில் மது அருந்திய SSI..! வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு..!

காவல்துறை வாகனத்தில் மது அருந்திய ஆயுதப்படை காவலர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவிய நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் லிங்கேஸ்வரன் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறை கைது செய்த பின்பு, அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்வது, சிறையில் இருந்து ஆஜர்படுத்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபடு வருகின்றனர்.

அந்தவகையில், கைதிகளை அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்த SSI லிங்கேஸ்வரன், காவல்துறை வாகனத்தில் சீருடை அணியாமல் அமர்ந்து, மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய காவல்துறை உயரதிகாரிகள் SSI லிங்கேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

மேலும், SSI லிங்கேஸ்வரன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அந்த வாகனத்தில் பயணித்த மற்ற காவலர்களில் யாரேனும் இவரோடு சேர்ந்து பணியின்போது மது அருந்தினார்களா என கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் மனசாட்சியே இல்லாம வாங்குறாங்க..! வயதான தம்பதிகள் வீடியோ வைரல்..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காயலான் கடை நடத்திவரும் வயதான தம்பதியிடம் மாமூல் கேட்டு மறைமலைநகர் காவல்துறை தொல்லை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் அருகாமையில் வயதான தம்பதி கடந்த சில ஆண்டுகளாக காயலான் கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைமலைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ரோந்து காவல்துறை ரூ.100 முதல் ரூ.200 கட்டாயப்படுத்தி மாமூல் வாங்குவதாகவும், ரோந்து வாகனத்தில் வரும் காவலர்கள் உயர் அதிகாரிக்கும் ஓட்டுனருக்கும் என இருவருக்குமே ரூ.200 கட்டாயப்படுத்தி கேட்டு வாங்குகிறார்கள் என காயிலாங் கடை உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், காவல் நிலையத்திற்கு மாதம், மாமூல் கொடுத்தாலும் ஒரு சில காவலர்கள் பெட்ரோல் போட காசு இல்லை என்று இந்த வழியாக வரும்போது எல்லாம் மாமூல் கேட்கிறார்கள். மீறி தர மறுத்தால் திருட்டு பொருள் வாங்குறீங்க என உங்கள் மீது வழக்கு போட்டு ரீமாண்ட் செய்து விடுவேன் என மிரட்டுகிறார்கள்.

அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் காவல்துறையினர் வரும் போதெல்லாம் ரூ.100, ரூ.200 என மாமூல் கொடுத்து அனுப்புகிறோம். மேலும், எங்கள் கடையை ஒட்டி உள்ள அனைத்து கடைகளுக்கும் இதே நிலைமைதான் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். நாங்களே கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் மனசாட்சியே இல்லாம வாங்குறாங்க என மன குமறலையும் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வயதான தம்பதிகள் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.