ஜெயக்குமார்: “குரள் வாசித்தீர்கள் ஓகே.. ஆனால் நிதி இல்லை…”

நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருக்குறளை பட்ஜெட் உரையில் வாசித்தார். குரள் வாசித்தீர்கள் ஓகே.. ஆனால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லையே. பணம் கொடுக்கவில்லையே. திருக்குறள் இருக்கிறது.. ஆனால் நிதி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அரசு உறிஞ்சுவதாகச் சாடினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டிற்கு ஆளும் தரப்பு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.

அதேநேரம் எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கிடையே அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பட்ஜெட்டை விமர்சித்துப் பேசினார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “மத்திய பட்ஜெட் குறித்து ஏற்கனவே நாங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளோம். நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருக்குறளை பட்ஜெட் உரையில் வாசித்தார். குரள் வாசித்தீர்கள் ஓகே.. ஆனால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லையே. பணம் கொடுக்கவில்லையே. திருக்குறள் இருக்கிறது.. ஆனால் நிதி இல்லை.

அதேபோல பட்ஜெட்டில் விமானத்துறை குறித்துப் பேசினார்கள். ஆனால், ரயில்வே என்ற வார்த்தை கூட இல்லை. தமிழகத்திற்கு எந்தவொரு சிறப்பு ரயில் திட்டமும் அறிவிக்கவில்லை. 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் விமானத்தில் பயணிப்போர் வெறும் 2 கோடி பேர் தான். அவர்களுக்காக 10 ஆண்டுகளில் 100 விமானங்களை அமைப்பதாகச் சொல்வீர்கள்.

ஆனால், அதை விடப் பல மடங்கு அதிகமான மக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள்.. அவர்களுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை. நெசவாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என யாருக்கும் எந்தவொரு சிறப்புத் திட்டமும் இல்லை. ஒருங்கிணைந்த திட்டமும் இல்லை. அரைச்ச மாவையே அரைப்பது போல இவர்கள் திட்டங்கள் உள்ளன. இது ஏமாற்றத்தை அளிப்பதாகவே உள்ளது.

வருமான வரி விலக்கை 12 லட்ச ரூபாயாக உயர்த்திவிட்டதாகப் பெருமை பேசுகிறீர்கள். ஒருவேளை ஒருவர் 13 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால்.. அந்த கூடுதல் ஒரு லட்சத்திற்கு மட்டும் தானே வரி விதிக்க வேண்டும். ஆனால், 12 லட்சத்திற்கும் வரி விதிப்பேன் என்றால் எப்படி ஏற்பது. ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி போல மக்களின் ரத்தத்தை வருமான வரி என்ற பெயரில் உறிஞ்சுகிறது.

ஒருவர் ரூ.12 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார் என்றால் அந்த கூடுதல் தொகைக்கு மட்டுமே வரி போட வேண்டும். 12 லட்சத்திற்குப் பதிலாகக் கூடுதலாக ஒரு லட்சம் சம்பாதித்துவிட்டார் என்பதற்காக மொத்தமாக வரி விதிப்பது சரியான போக்கு இல்லை. இது சம நீதியா.. இது சம நீதியும் இல்லை. சமூக நீதியும் இல்லை.. பெட்ரோல், டீசலுக்கான வரி எல்லாம் அவர்கள் கீழ் தான் வருகிறது.

அதை ஏன் அவர்கள் குறைக்கவில்லை. அதையெல்லாம் குறைக்க மாட்டார்களாம்.. வருமான வரியை மட்டுமே குறைப்பார்களாம். 120 கோடி பேரில் வெறும் 4, 5 கோடி பேர் மட்டுமே வருமான வரியைச் செலுத்துவார்கள். அவர்களுக்குச் சலுகை தருகிறார்களாம். அப்போ மற்றவர்களுக்கு என்ன சலுகை தருவார்கள்? இது ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லை. பீகாரை மையப்படுத்திப் போடப்பட்ட பட்ஜெட் போலவே இருக்கிறது. எங்களின் வரி பணத்தைப் பீகாருக்கு மட்டும் தான் தருவார்களாம்.. தமிழர்களுக்கு அப்போ என்ன இருக்கிறது” என்று அவர் மிகக் கடுமையாக ஜெயக்குமார் விமர்சித்துப் பேசினார்.

ஜெயக்குமார்: “வருமான வரி என்ற பெயரில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி..”

கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் ஏழைகளுக்கு எதுவுமே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி போல மக்களின் ரத்தத்தை மத்திய அரசு உறிஞ்சுவதாகச் சாடினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டிற்கு ஆளும் தரப்பு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.

அதேநேரம் எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கிடையே அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பட்ஜெட்டை விமர்சித்துப் பேசினார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “மத்திய பட்ஜெட் குறித்து ஏற்கனவே நாங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளோம். நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருக்குறளை பட்ஜெட் உரையில் வாசித்தார். குரள் வாசித்தீர்கள் ஓகே.. ஆனால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லையே. பணம் கொடுக்கவில்லையே. திருக்குறள் இருக்கிறது.. ஆனால் நிதி இல்லை.

அதேபோல பட்ஜெட்டில் விமானத்துறை குறித்துப் பேசினார்கள். ஆனால், ரயில்வே என்ற வார்த்தை கூட இல்லை. தமிழகத்திற்கு எந்தவொரு சிறப்பு ரயில் திட்டமும் அறிவிக்கவில்லை. 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் விமானத்தில் பயணிப்போர் வெறும் 2 கோடி பேர் தான். அவர்களுக்காக 10 ஆண்டுகளில் 100 விமானங்களை அமைப்பதாகச் சொல்வீர்கள்.

ஆனால், அதை விடப் பல மடங்கு அதிகமான மக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள்.. அவர்களுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை. நெசவாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என யாருக்கும் எந்தவொரு சிறப்புத் திட்டமும் இல்லை. ஒருங்கிணைந்த திட்டமும் இல்லை. அரைச்ச மாவையே அரைப்பது போல இவர்கள் திட்டங்கள் உள்ளன. இது ஏமாற்றத்தை அளிப்பதாகவே உள்ளது.

வருமான வரி விலக்கை 12 லட்ச ரூபாயாக உயர்த்திவிட்டதாகப் பெருமை பேசுகிறீர்கள். ஒருவேளை ஒருவர் 13 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால்.. அந்த கூடுதல் ஒரு லட்சத்திற்கு மட்டும் தானே வரி விதிக்க வேண்டும். ஆனால், 12 லட்சத்திற்கும் வரி விதிப்பேன் என்றால் எப்படி ஏற்பது. ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி போல மக்களின் ரத்தத்தை வருமான வரி என்ற பெயரில் உறிஞ்சுகிறது.

ஒருவர் ரூ.12 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார் என்றால் அந்த கூடுதல் தொகைக்கு மட்டுமே வரி போட வேண்டும். 12 லட்சத்திற்குப் பதிலாகக் கூடுதலாக ஒரு லட்சம் சம்பாதித்துவிட்டார் என்பதற்காக மொத்தமாக வரி விதிப்பது சரியான போக்கு இல்லை. இது சம நீதியா.. இது சம நீதியும் இல்லை. சமூக நீதியும் இல்லை.. பெட்ரோல், டீசலுக்கான வரி எல்லாம் அவர்கள் கீழ் தான் வருகிறது.

அதை ஏன் அவர்கள் குறைக்கவில்லை. அதையெல்லாம் குறைக்க மாட்டார்களாம்.. வருமான வரியை மட்டுமே குறைப்பார்களாம். 120 கோடி பேரில் வெறும் 4, 5 கோடி பேர் மட்டுமே வருமான வரியைச் செலுத்துவார்கள். அவர்களுக்குச் சலுகை தருகிறார்களாம். அப்போ மற்றவர்களுக்கு என்ன சலுகை தருவார்கள்? இது ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லை. பீகாரை மையப்படுத்திப் போடப்பட்ட பட்ஜெட் போலவே இருக்கிறது. எங்களின் வரி பணத்தைப் பீகாருக்கு மட்டும் தான் தருவார்களாம்.. தமிழர்களுக்கு அப்போ என்ன இருக்கிறது” என்று அவர் மிகக் கடுமையாக ஜெயக்குமார் விமர்சித்துப் பேசினார்.

rahul gandhi whatsapp channel: மோடி நண்பர்களின் செல்வத்தை காப்பாற்ற நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைக்கிறார்..!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது வாட்ஸ்அப் சேனல் மூலம் வெளியிட்டுள்ள பதிவில், வரி பயங்கரவாதம் என்பது பாஜக ஆட்சியின் ஆபத்தான முகம். இதுதான் உண்மை. நடுத்தர வர்க்க மக்களின் வருமானத்தின் மீது இன்று இந்தியாவில் வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் சம்பளம் பல ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை.

வருமானம் அப்படியே உள்ளது. ஆனால் வருமான வரி பெருமளவில் அதிகரித்து வருகிறது. பயங்கர பணவீக்கத்தின் இந்த காலகட்டத்தில், எல்லாவற்றுக்கும் அதிக ஜிஎஸ்டி செலுத்தி பிழைக்கும் நடுத்தர மக்கள் சிந்திக்க வேண்டும். உங்கள் வருமானம் பெரிய கார்ப்பரேட்கள் அல்லது வணிகர்களின் வருமானத்தை விட அதிகமாக இருக்கிறதா? உங்களுக்கு அரசாங்க வசதிகளால் ஏதேனும் சிறப்பு பலன் கிடைக்கிறதா? இல்லை என்பது சரிதானே? அப்படியானால் உங்களிடமிருந்து ஏன் இந்த அளவு கண்மூடித்தனமான வரி வசூலிக்கப்படுகிறது?. உங்களை பயமுறுத்தி, உங்களிடம் அரசின் விருப்பத்தை திணிப்பதன் மூலம் உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.

இது வரி பயங்கரவாதத்தின் சக்கரவியூகம். பிரதமர் மோடி தனது நண்பர்களின் செல்வத்தை காப்பாற்றவும், அதிகரிக்கவும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைக்கிறார். இந்த பயங்கரவாதம் மற்றும் அநீதிக்குஎதிராக அனைத்து கடின உழைப்பாளி, நேர்மையான இந்தியர்களுடன் நான் நிற்கிறேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.