சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜூ தலைமையில் அலுவலகத்தின் அனைத்து வாயிற் கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்.

மேலும் அலுவலர்கள், ஓட்டுநர் உரிமம் பெற வந்தவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோரை பிடித்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் சேரங்கோடு ஊராட்சியில் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை

கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் சேரங்கோடு ஊராட்சியில் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை, ஊராட்சி தலைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லில்லி ஏலியாஸ் தலைவராக உள்ளார். இந்த ஊராட்சியில் திட்டப் பணிகளுக்கு கமிஷன் பெற்று, தகுதியில்லாத நபர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று மாலையில் சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத, ரூ.3.25 லட்சம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அந்தப் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை, ஊராட்சி செயலர் சஜீத், தலைவர் லில்லி ஏலியாஸ் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.