மகளுடன் நிச்சயதார்த்தம்..! மாமியாருடன் ஓட்டம் பிடித்த இளைஞர்..!

சின்ன பொண்ணு வேணாம் மாமா..! பெரிய பொண்ணும் வேணாம் மாமா..! அத்தை மட்டும் போதும் மாமா..!! என்ற பாடல் வரிகளை போல  மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்த இளைஞரை தனக்கு பிடித்துள்ளதாகவும், அவரை காதலிப்பதாகவும் அவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் எனக் கூறிய காவல் நிலையத்தையே கதிகலங்க வைத்த சம்பவம் இன்று சமூக வலைத்தளங்களில் நாடு முழுவதும் பேசு பொருளாகி வருகின்றது.

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த சப்னா தேவி தனது மகளுக்கு ராகுல் என்ற வாலிபரை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். பெண் பார்க்கும் படலம் நிச்சயதார்த்தம் எல்லாம் முடிவடைந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்தபோது சப்னா தேவி மாயமானார். அவர் மாயமான ஆறாம் தேதியே ராகுலும் மாயமானார். விசாரித்த போது தான் வீட்டிலிருந்த மூன்று லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் சப்னா தேவி தனது மகளுக்கு நிச்சயத்தை இளைஞருடன் ஓடியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சப்னா தேவியின் கணவரான ஜிதேந்திர குமார் இது குறித்து அலிகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனது மருமகனுடன் தனது மனைவி வீட்டில் இருந்த நகை பணத்துடன் மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார். இந்நிலையில் நேபாளம் எல்லையில் பீகாரின் சீதாமருங்கி பகுதியில் இருவரும் தங்கி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து காவல்துறை அவர்களை பிடிக்க சென்ற நிலையில் அவர்களாகவே உத்தரப் பிரதேச காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தனது மருமகன் ராகுலுடன் காதல் ஏற்பட்டதாகவும் திருமணத்திற்கு முன்பு இருவரும் அதிக நேரம் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் தனது மகளுக்கு பார்த்த நபருடன் தனக்கு காதல் ஏற்படும் என யோசிக்கவில்லை என கூறி இருக்கிறார். எனது மருமகன் நகைகளை எடுத்துச் செல்லவில்லை. வீட்டில் இருந்து செல்போனையும் 200 ரூபாய் பணத்துடன் மட்டுமே தான் சென்றதாக கூறியுள்ளார்.

மேலும் குடிகாரரான கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னிடம் தகராறு செய்தாளராகவும், தனது மகளும் தன்னை திட்டிக் கொண்டே இருந்த நிலையில் தொலைபேசியில் பேசிய ராகுல்தான் ஆறுதலாக இருந்தார். என்ன நடந்தாலும் பரவாயில்லை இனிமேல் நாம் ஒன்றாக வாழ்வோம் என கூறி வீட்டை விட்டு சென்றதாகவும் இனி அவர்தான் தனது வாழ்க்கையில் என தெரிவித்தார்.

போக்குவரத்து விதிகள் என்ற பெயரில்.. ஆபாச போட்டோ எடுப்பதா?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டுபிடிக்க முக்கியமான நடைமுறை ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். காவல்துறை உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் போட்டோ எடுத்தால் போதும் அபராதம் உங்களை தேடி வருகிறது. பெங்களூர் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் சென்னையில் இதில் கூடுதல் ஒரு வழிமுறையும் சேர்க்கப்பட்டு உள்ளது. சென்னையில் காவல்துறை மட்டுமின்றி மக்களும் போட்டோ எடுக்க முடியும். மக்களும் போட்டோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய முடியும். அதில் இருக்கும் நம்பரை பார்த்து.. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் சென்றால்.. அந்த நம்பருக்கு தானாக அபராதம் அனுப்பப்படும்.

இந்த நடைமுறையை கடந்த சில நாட்களாக காவல்துறை பின்பற்றி வருகின்றனர். ஆனால் இந்த புதிய முறை தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதன்படி சில இளைஞர்கள் பெண்களை தவறான கோணத்தில் ஆபாசமாக படம் எடுத்து.. அதை இணையத்தில் போஸ்ட் செய்து.. இவர் ஹெல்மெட் போடவில்லை என்பது போல போஸ்ட் செய்கின்றனர்.

அதற்கு காவல்துறையினருக்கு அந்த இளைஞர்களை கண்டிக்காமல்.. ஹெல்மெட் போடாத ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அந்த இளைஞரின் செயலும், காவல்துறையினரின் பதிலும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காக காவல்துறை இந்த விதிகளை கொண்டு வந்து இருக்கலாம். ஆனால் இதை சில இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி அதை வைத்து பெண்களை புகைப்படம் எடுக்கிறார்கள். அதை காவல்துறை கண்டிப்பது இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

அதேபோல் சாலை விதிகளை மீறுபவர்களை கண்டிப்பது காவல்துறையினரின் வேலை. அதை மக்கள் கையில் கொடுப்பது தவறு. தேவையில்லாத மோதல்களுக்கு இது வழி வகுக்கும் என்று கூறி உள்ளனர். மேலே காட்டப்பட்டுள்ள டீவிட்டில் கூட இளைஞர் ஒருவர் மாடர்ன் உடை அணிந்துள்ள பெண்ணை புகைப்படம் எடுத்துள்ளார். ஆனால் அவர் அருகே இருக்கும் ஹெல்மெட் அணியாத மற்ற ஆணை எடுக்கவில்லை. இதை காவல்துறையினரும் கண்டிக்காமல் அந்த பெண் சென்ற பைக்கிற்கு அபராதம் விதித்துள்ளனர். இதை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.