பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அசடு வழிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த நெத்தியடி

கடந்த 23 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலமாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற நிலையில் முதலமைச்சர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், ‘தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரிகளின் முன்பு போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. சமுதாயத்தை பாதுகாக்கும் விதமாக அரசு போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்குமா?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 10673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 81 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 143.43 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 2458 வழக்குகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் முன் போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. அந்த சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு குற்றம் செய்பவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் பதில் கூறினார். கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டசபைக்குள் குட்கா பாக்கெட் கொண்டு வந்து, பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அது தொடர்பாக பல்வேறு சட்ட சிக்கல்களையும் சந்தித்தார்.

இந்த சூழலில் அதே மு.க.ஸ்டாலின் இன்றைக்கு முதலமைச்சராக உள்ளபோது போதை பொருள் விவகாரத்தை கையில் எடுத்த பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினை கேள்வியால் மடக்கினார். இதனை சற்றும் எதிர்பாராத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பலரையும் ஆச்சரியப்படும் விதத்தில் புள்ளி விபரங்களுடன் அதுதொடர்பான, பதிலை புட்டுபுட்டு வைத்தார். கேள்வி எழுப்பிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அசடு வழிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த நெத்தியடி பதிலுக்கு எம்எல்ஏக்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

கரூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஜவுளி பூங்கா // அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 25 ஆயிரம் கோடி செலவில்

கரூர் நகரில் வீட்டு உபயோகத்திற்கான தலையணை உறை, திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள், மெத்தை விரிப்பு, கையுறைகள், சமையல் அறையில் பயன்படுத்தப்பட கூடிய துண்டுகள், சமையலர்களுக்கான உடைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இவை கரூரில் இருந்து தமிழகம் முழுவதும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பபட்டு வருகின்றன.

கடந்த 23 -ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் பேரவை கூட்டத்தொடர் தொடங்கி இன்றைய தொழில்துறை மானிய கோரிக்கையின் போது, கரூர் மக்களின் நீண்டகால கனவான ஜவுளி பூங்கா அமைய அறிவிப்பு வெளியிட்டது

கரூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஜவுளி பூங்கா அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 25 ஆயிரம் கோடி செலவில்

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதியை, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் அதிகப்படுத்த, சிப்காட் மூலம், 200 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான ஜவுளி பூங்காவை, ஜவுளி பதனம் செய்யும் பிரிவு, ஆயத்த ஆடை தயாரிக்கும் பிரிவு, வீட்டு ஜவுளி உற்பத்திப் பிரிவு, உலகத்தரம் வாய்ந்த பரிசோதனை கூடம், கண்காட்சி கூடம், உற்பத்தி மேம்பாட்டு மையம், ஜவுளி வடிவமைப்பு மையம், பிரத்யேகமான திறன் மேம்பாட்டு மையம் போன்ற சிறப்பு அம்சங்களுடன் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு : மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்

சென்னை அண்ணா நினைவக வளாகத்தில் 39 கோடியில் தமிழக மக்களுக்காக ஓய்வின்றி உழைத்த உத்தம தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே  2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று  சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

பெரியாரின் கொள்கைகளை மனதிலே சுமந்து…அண்ணாவின் சிந்தனைகளை மனதிலே சித்தரித்து…கலைஞரின் பகுத்தறிவை மனதிலே பகுத்து… நல்லாட்சி செய்யும் மாண்புமிகு தமிழக முதல்வரே வாழ்த்தி வணங்குகிறோம்..! சைதை ஏ. சந்தோஷ்

பெரியாரின் கொள்கைகளை

                              மனதிலே சுமந்து…

அண்ணாவின் சிந்தனைகளை

                             மனதிலே சித்தரித்து…

கலைஞரின்  பகுத்தறிவை

                             மனதிலே பகுத்து…

நல்லாட்சி செய்யும் மாண்புமிகு தமிழக முதல்வரே வாழ்த்தி வணங்குகிறோம்..! சைதை . சந்தோஷ்ex .Mc

தெற்கே உதித்த சூரியனே தீயவைகளை சுட்டெரித்திட தீண்டாமையை ஒழித்திட தமிழகத்தை தலை நிமிர்ந்து செய்திட நல்லாட்சி நல்கிடு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் குருக்கபுரம் கிராமம் கிருஷ்ணவேணி செல்வராஜ்

தெற்கே உதித்த சூரியனே

தீயவைகளை சுட்டெரித்திட

தீண்டாமையை ஒழித்திட

தமிழகத்தை தலை நிமிர்ந்து செய்திட

நல்லாட்சி நல்கிடு

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் வட்டம், குருக்கபுரம் கிராமம் கிருஷ்ணவேணி செல்வராஜ் மற்றும் சித்ரா ஜெயராமன்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா .சுப்ரமணியன் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் சி . அமலதாஸ்