திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், SV புரம் ஜீவா திடலில் ஜீவா நற்பணி மன்றம் சார்பில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா, சமத்துவ பொங்கல் விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கடந்த ஞாயிறு கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.
இந்த முப்பெரும் விழாவிற்கு ஜீவா நற்பணி மன்ற தலைவர் குணா செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்.கிட்டு என்கின்ற கிருஷ்ணசாமி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணக்கம்பாளையம் தேசியக் கொடி ஏற்றினார். சமத்துவ பொங்கல் விழாவை கணக்கம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா என்கின்ற காமாட்சி அய்யாவு அவர்கள் துவக்கி வைக்க மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன் MA அவர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த முப்பெரும் விழாவில் நகர மன்ற தலைவர் மு.மத்தின் மற்றும் ப. சண்முக வடிவேல் வருவாய் கோட்டாட்சியர் உசிலம்பட்டி மதுரை மாவட்டம் விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார். மடத்துக்குளம் தொழில் அதிபர் கே.டி.எல் அரிமா அப்பாஸ், பால் நாராயணன், கா.அப்பாஸ் அவர்கள், தெய்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சந்திரமௌலி காவல்துறை உதவி ஆய்வாளர் ராமேஸ்வரன் சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினர். மேலும் இந்த முப்பெரும் விழாவில் பொதுமக்களும் மற்றும் குழந்தைகளும் விளையாட்டு போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.